1

இத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் பல்வேறு நண்பர்களிடமிருந்தும், பல்வேறு இணைய தளங்களிலும், செய்திதாள்கள் மூலமும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் இங்கு தொகுத்து பகிரப்படுகிறது.. எனவே இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தன்மை கூற இயலாது.. இத்தகவல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது....

Monday, March 30, 2015

இருப்பு பதிவேடு பற்றிய விளக்கம்


  உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளில் மிக முக்கியமானது இருப்பு பதிவேடு. இப்பதிவேடு கடைகளில் அச்சிட்டு இருப்பு பதிவேடு என விற்பனைக்கு கிடைக்கும். அதில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக அச்சிட்டு விற்பனை செய்கின்றனர், இத்தளத்தில் பொதுவான இருப்பு பதிவேடு ஒன்றினை மாதிரியாக காட்டப்பட்டுள்ளது. இம்மாதிரியின் உள்ளடக்கமும் தங்கள் பகுதியில் விற்பனைக்கு கிடைக்கும் பதிவேடுகளிலும் வேறுபாடுகள் இருக்கலாம். எனவே ஆசிரியர்கள் அதனை சற்று கவனித்து பதிவுகள் செய்ய வேண்டுகிறோம்.


மாதிரி இருப்பு பதிவேடு பார்வையிட இங்கு கிளிக் செய்யவும்..

Saturday, March 28, 2015

பள்ளியில் மதிலகப் போட்டிகள் நடத்துவது பற்றிய விளக்கம்:-


  ஒரு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குள் அந்த பள்ளி வளாகத்திற்குள் நடத்தப்படும் போட்டிகள் மதிலகப் போட்டிகள் ஆகும்.

 அப்போட்டிகளை நடத்தி அதன் விபரங்களை கிழ்கண்டவாறு பதிவு செய்து பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்.





Thursday, March 26, 2015

உங்கள் பள்ளியில் சதுரங்கப்போட்டிகள் இனி மிக எளிதாக நடத்தலாம்..

   இதுவரை நாம் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகளை நடத்தும் பொது சதுரங்க வீரர்களுக்கு PAIRING செய்ய மிகவும் சிரமப்பட்டு வந்தோம்.
அந்த குறையைப் போக்க மிக எளிதான SOFTWARE ஒன்று உள்ளது.
அதனை கிழ்கண்ட link சொடுக்குவதன் மூலம் DOWNLOAD செய்து கொள்ளலாம்.

PLEASE CLICK HERE TO SOFTWARE DOWNLOAD...

  அதற்கான வழிமுறைகளும் PDF வடிவில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

      User Manual



Image result for CHESS

 
   இந்த சாப்ட்வேர் மூலம் அதிகபட்சமாக முப்பது 30 மாணவர்களுக்கு மட்டுமே ஒரு முறை PAIRING செய்ய முடியும்.. இதை நீங்கள் முயற்சி செய்து பள்ளி அளவிலான சதுரங்க போட்டிகளை எந்த ASSOCIATION துணையுமின்றி வெற்றிகரமாக நடத்த இயலும்...



பலவித ஆசனங்களை குறித்த சிறந்த புத்தகம் 
பீடிஎப் வடிவில் உங்களுக்காக...




Image result for YOGA



பல விதமான ஆசனங்களும் அதன் விளக்கமும் அடங்கிய மின்புத்தகம்

தரவிறக்க இங்கு க்ளிக் செய்யவும்..






பொதுவாக நிலையான வருமானம் கொடுப்பவை என்றால் வங்கிகளின் வைப்பு நிதி (Fixed Deposit) தான் நியாபகம் வரும். அடுத்து அரசின் பல பத்திரங்கள் நினைவுக்கு வரும்.

இது போக, தனியார் நிறுவனங்களும் நிலையான வருமானம் கொடுக்கும் பத்திரங்களை வெளியிட்டு வருகின்றன.

இதில் ஒரு வித பத்திரம் தான் Non Convertible Debentures (NCD).



பொதுவாக நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணத்தினை பெற வங்கிகளை நாடும். ஆனால் வணிக அளவிலான வட்டி என்பது வங்கிகளில் கொஞ்சம் அதிகமே.

அதனால் நிறுவனங்கள் வங்கிகளுக்கு பதிலாக மக்களிடம் பணத்தை பெற்று தங்கள் வியாபாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள சில வழிமுறைகள் உள்ளன.

முதல் வழிமுறை,

Convertible Debentures என்ற பெயரில் பத்திரங்கள் வெளியிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட காலம் வரை நிலையான வட்டியை அளித்து அதன் பிறகு நிறுவன பங்குகளாக மாற்றி விடும் நடைமுறை இது.

பங்குச்சந்தையிலே எளிதில் பங்கு வாங்கும் நடைமுறைகள் இருப்பதால் தனி நபர்களுக்கு இது ஒத்து வராது.

அதனால் இரண்டாவது வழியை யோசிக்கலாம்.

இதன் பெயர் தான்  Non Convertible Debentures (NCD).

இதில் பெறப்படும் பணத்திற்கு நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை வட்டி வழங்கும். இந்த வட்டி விகிதம் வங்கி வட்டி விகிதங்களை விட இரண்டு முதல் மூன்று சதவீதங்கள் அதிகமாக இருக்கும். இறுதியில் பணம் திருப்பி அளிக்கப்பட்டு விடும். பங்குகளாக மாற்றப்படாது..
இனி ஒரு நிறுவனத்திடம் பணத்தைக் கொடுக்கும் போது எவ்வளவு பாதுகாப்பு என்ற கேள்வி இயல்பாக எழும்.

பொதுவாக இந்த பத்திரங்கள் RBIயின் அனுமதியோடு தான் வருகின்றன. அதனால் பங்குகளை  விட ஓரளவு பாதுகாப்பு உத்தரவாதம் செய்யப்பட்டது.

விதி முறைகளின் படி, ஒவ்வொரு நிறுவனமும்  CRISIL போன்ற நிதி நிறுவனங்களின் தர வரிசையை பெற்றிருக்க வேண்டும். இந்த தர வரிசையை சரி பார்த்து நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளலாம்.

அதே நேரத்தில் NCD பத்திரங்களிலே இரண்டு வகை உள்ளது. 

முதல் வகை Secured NCD பத்திரங்கள். இதில் நிறுவனம் திவாலாகும் நிலை வந்தால் முதலில் சொத்துக்கள் விற்கப்பட்டு  Secured NCD பத்திரங்கள் வாங்கியவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

இரண்டாவது Unsecured NCD பத்திரங்கள். இதில் நிறுவனம் திவாலாகும் நிலை வந்தால் மற்றவங்களுக்கு கொடுத்து போக மீதி உள்ளதை மட்டும் பிரித்து நமக்கு தருவார்கள்.

ஆதலால் Secured NCD பத்திரங்கள் அதிக அளவு பாதுகாப்பானவை.

இந்த பத்திரங்களில் கிடைக்கும் வருமானங்களுக்கு வரி விலக்கு எதுவும் இல்லை என்பது ஒரு பெரிய குறை.

பங்குச்சந்தைகள் வீழ்ச்சியில் இருக்கும் போது இந்த பத்திர முதலீடுகள் பயனுள்ளவையாக இருக்கும்.

நிறுவனங்களை நீண்ட காலத்திற்கு நம்ப முடியாததால் முதலீடு காலத்தை ஐந்து வருடங்களுக்குள் வைத்து இருப்பது நன்றாக இருக்கும்..

Sunday, March 22, 2015

BEATERS TALENT TEST


      சர்வதேச அளவிலான பதக்கம் பெரும் வருங்கால விளையாட்டு வீரர்களை கண்டறியும் திட்டம் ,உடல் திறன் போட்டிகள் நடத்துதல் தொடர்பான தமிழ்நாட்டு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் கடிதம். நாள்:28.09.2012



கடிதம் பார்வையிட இங்கு CLICK செய்யவும்..

Saturday, March 21, 2015

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் தொடர்பான பழைய அரசாணை;


      உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் தொடர்பான பழைய அரசாணை.தங்களிடம் புதிய அரசாணைகள் இருப்பின் MAIL ல் தொடர்பு கொள்ளவும்.




Friday, March 20, 2015


பழுதடைந்தத விளையாட்டுப்பொருட்கள் ஏலம் விடும் முறை :

   உடற்கல்வி ஆசிரியர் தனது பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்திய பின் விளையாட்டுப்பொருட்கள் பழுதடைந்துவிடின் அதனை மேலும் பயன்படுத்த முடியாது எனில் கிழ்காணும் விதிமுறைகளைப் பின்பற்றி அப்பொருட்களை ஏலத்தில் விடலாம்.

 * பயன்படுத்திய பின் பழுதடைந்தத விளையாட்டுப்பொருட்களின் முழுமையான விவர அறிக்கை தயாரிக்க வேண்டும்.

* நிரந்தர விளையாட்டுப் பொருள்களுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளரின் அனுமதி பெற வேண்டும்.

 *அனுமதி கிடைத்தபின் ஏலத்தில் விடுவதற்கான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

* ஏலம் விடும் நாளை முன்கூட்டியே  மாணவர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக தெரிவிக்க வேண்டும்.


 உடற்கல்வித்துறையில் ஒரு உடற்கல்வி ஆசிரியர் பராமரிக்க வேண்டிய  பதிவேடுகள்.





  • இருப்புப் பதிவேடு.(Stock Register)

  • தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டுப் பதிவேடு.(C.C.E Register)

  • கூட்டு உடற்பயிற்சிப் பதிவேடு.(Mass-Drill Register)

  • மதிர்புறப் போட்டிகள் பதிவேடு.(Extra-Mural Register)

  • மதிலகப் போட்டிகள் பதிவேடு.(Intra-Mural Register)

  • ஏலப்பதிவேடு.(Auction Register)

  • உலகத் திறனாய்வு உடல்திறன் போட்டிகள் பதிவேடு.(World Beaters Talent Test Register)

  • விளையாட்டுப் பொருட்கள் வழங்குதல் பதிவேடு.(Issue Register)

  • சுற்றறிக்கை பதிவேடு.(Circular Register)

  • வரவு-செலவு பதிவேடு.(Budget Register)

  • தீர்மானப் பதிவேடு.(Resolution Register)

  • பற்றுச்சீட்டுகள் பதிவேடு.(Receipt Register)

  • நுழைவுப் படிவங்களின் தொகுப்பு பதிவேடு.(Consolidated Entry Forms Register)

  • சான்றிதழ்கள் வழங்கிய விவரங்கள் அடங்கிய பதிவேடு.(Certificate Issue Register)

  • தாண்டுதல்-ஓடுதல்-எறிதல் குழு பதிவேடு(J.R.T Register)

  • பழுதடைந்த விளையாட்டுப் பொருட்கள் பதிவேடு. (Condemned Register)

  •  பயன்படுத்தாத பொருட்கள் ஏலம் விட்டதன் ஏலச்சிட்டுகளின்  தொகுப்பு பதிவேடு. (Auction Receipt Register)..

Thursday, March 19, 2015

Condemned Register.   (பழுதடைந்த விளையாட்டுப் பொருட்கள் பதிவேடு).



    உடற்கல்வித்துறையில் ஒரு உடற்கல்வி ஆசிரியர் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளில் மிக முக்கியமான பதிவேடுகள்.

 1.Condemned Register.   (பழுதடைந்த விளையாட்டுப் பொருட்கள் பதிவேடு).

2. Auction Receipt    (பயன்படுத்தாத பொருட்கள் ஏலம் விட்டதன் ஏலச்சிட்டுகளின்  தொகுப்பு பதிவேடு).

    இதனை நீங்கள் ஒரு நீள வடிவமுடைய (long size -Ruled) நோட்டு ஒன்று வாங்கி அதனுள் கோடு போட்டு கீழக்கண்டவாறு பத்திகள் அமைத்து பயன்படுத்தலாம்.இது Stock Register போன்று பத்திகளை உடையதாக இருக்கும்.இதில் தெளிவாக கணக்கிட்டு எழுதி தலைமைஆசிரியரிடம் கையொப்பம் பெற்று பராமரிக்க வேண்டும்..


Sunday, March 15, 2015

உடலினை உறுதி செய் ..


‘நானும் உடற்பயிற்சி செய்யும் பேர்வழி’ என்று தடாலடியாக தலைதெறிக்க ஓடுவதோ, கண்ணில் காணும் பளுவை எல்லாம் தூக்குவதோ ஆபத்தில் தான் முடியும். அப்படியென்றால் உடற் பயிற்சியை எப்படித்தான் ஆரம்பிப்பது? சிறிய தொடக்கம் – பெரும் நன்மை சீரான மூச்சில் இருந்து உடற்பயிற்சிக்கான மூச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ள 6 முதல் 8 வாரங்கள் தேவை. அப்போது மெதுவாக வாக்கிங், வேகநடை, மெது ஓட்டம், மித ஓட்டம், வேக ஓட்டம் என உங்கள் வயதுக்கேற்ப தொடங்க வேண்டும்.

    உடற்பயிற்சிக்கான சற்று அதிக பளுவை தாங்கக்கூடிய இதய வலிமை, நுரையீரல் வலிமை, எலும்புகள் இணையுமிடங்களின் வலிமை, தசைகளின் வலிமை, மன வலிமை என அனைத்தையும் படிப்படியாக மூச்சுத் திறமையால் கையாள தொடங்கவேண்டும். Maximum Training Heart Rate = 220 age. 220 என்ற எண்ணிலிருந்து வயதைக் கழிப்பதன் விடையே, உங்கள் அதிகபட்ச பயிற்சி நேர இதயத் துடிப்பு. அதாவது, 20 வயது இளைஞர் உடற்பயிற்சியில் ஈடுபடுவதாகக் கொள்வோம். அவரது உடல் வலிமை, இளமையின் காரணமாக மூச்சுத் திறனை மேம்படுத்திய பிறகு, வேக ஓட்டம், கடின உடற்பயிற்சி செய்யும் போது, அந்த இளைஞர் அதிகமான இதயத் துடிப்பை தாங்கக்கூடிய வலிமையைப் பெறுவார். அதே நேரம் 70 வயதுடைய வயோதிகர் உடற்பயிற்சி செய்யும் போது, மிக அதிக இதயத் துடிப்பு உண்டாவதைத் தவிர்க்க வேண்டும். அதனால் மெதுவான, சிறிய அளவிலான தொடக்கம் எனும் நிபந்தனைகளை (Progressive Resistance Exercise Principles) கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். இதன் மூலமாக உடலின் தசை மண்டலங்கள், ரத்த ஓட்டம், மூச்சுத் திறன் ஆகியவை அடுக்கடுக்காக மென்மேலும் வலிமை பெறும்.
 

  சிறு வலிகள், காயங்கள் ஏற்படும் நேரங்களில் அவற்றை அவ்வப்போதே சரி செய்யக்கூடிய சக்தியையும் நமது உடல் அடையும். ஒவ்வோர் இதயத் துடிப்புக்கும் அதிக அளவு ரத்தத்தை இதயத்துக்கு அனுப்பி, நமது இதயத்தை இரும்பு போல வலிமையடையச் செய்யும். முதல் 8 வாரங்கள் உடற்பயிற்சியை மெதுவாக, சிறியதாகத் தொடங்கி, சீராகக் கூட்டி – ஆனால், தொடர்ச்சியாக அடுத்த 24 மணி நேரத்துக்குள் அல்லது அதிகபட்சம் 48 மணி நேரத்துக்குள் மீண்டும் தொடர்வது மிக அவசியம். இல்லாவிட்டால் நீங்கள் பட்ட சிரமம், உங்கள் பலம் அனைத்தும் பலவீனமாக வாய்ப்புண்டு. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் உடல், மன வலிமை கூடிக்கொண்டே இருப்பது உண்மை. வாரம் 4 அல்லது 5 நாட்கள், அதில் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் தொடர் உடற்பயிற்சி மிகவும் அற்புதமான தொடக்கமாகும். சிறப்புத் துறையில் ஈடுபாடு (Principle Of Specificity) முதல் 6 – 8 வாரங்களில் படிப்படியான முன்னேற்றத்துக்குப் பிறகு மேலும் படிப்படியாக, சிறுகச் சிறுக, தங்களுக்குத் தேவையான விளையாட்டுகளில் – கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, நீந்தல், சிறகுப்பந்து, டென்னிஸ், ஓட்டப்பந்தயம், குஸ்தி, பாக்ஸிங், பளு தூக்குதல், நடனப் பயிற்சிகள், ஆண் அழகன், பெண் அழகி என குறிப்பிட்ட பயிற்சிகளில், சிறந்த பயிற்சியாளர்களின் துணையோடு கவனம் செலுத்த வேண்டும். இந்த சிறப்புப் பயிற்சிகள் அவரவர் விளையாட்டுக்கேற்ப, பலவித மாறுதல்கள் கொண்டதாக அமையும். எல்லாவற்றுக்கும் ஒரே விதமான பயிற்சி பலன் அளிக்காது. குறிப்பிட்ட பயிற்சி அளிப்பதில் வல்லுனரான பயிற்சியாளரிடம் செல்வதே உங்களின் திறமையை வளர்க்கவும் அந்த விளையாட்டில் நீங்கள் தலைசிறந்து விளங்கவும் வாய்ப்பாக அமையும்.

    உடலுக்கு உகந்தது எது? ஒன்றுமே செய்யாமல் சோம்பேறியாக இருப்பது, உடலை வாட்டி வதைத்து கொள்வது – இவ்விரண்டையும் நம் உடல் அறவே வெறுக்கிறது. சமீபகாலமாக சில ஆண்கள் 6 அல்லது 8 பேக் என்று சொல்லிக் கொண்டு, 10 மணி நேரம் ஜிம்மில் தண்ணீர் கூடக் குடிக்காமல் உடலை வதைக்கின்றனர். அதே 24 மணி நேரமும் டி.வி. பார்ப்பது, மொபைல் போனிலேயே வாழ்வது என்றும் சிலர் இருக்கின்றனர். சில பெண்கள் எப்போதும் துணி துவைப்பது, தண்ணீர் அடித்து, எடுப்பது, அடுப்படியில் அவதிப்படுவது என இருப்பார்கள். இப்படி உடலுக்கு ஓய்வே இல்லாமல், உடலை வதைத்து, கொடுமைப் படுத்துவதையும் நம் உடல் விரும்பாது. அப்படி என்றால் உடலுக்கு உகந்ததுதான் என்ன? நம் உடல் சில நேரங்களில் சிறிய, பளு குறைந்த வேலைகளையும் சில நேரங்களில் சற்று அதிக பளு உடைய வேலைகளையும் மாறி மாறிச் செய்து, சற்று ஓய்வுக்குப் பிறகு மீண்டும் செய்வதை மிகவும் ரசித்து விரும்புகிறது. இது உடற்பயிற்சி செய்வோருக்கு மட்டுமல்ல… அனைவருக்குமே பொருந்தும். ஆகவே… உடலை நேசித்து அதன் அன்பை பெறுங்கள்!

கண்கள் இரண்டால் ....


உடலில் சாளரமாகவும், தன்னிகரற்ற உறுப்பாகவும் இருப்பவை கண்கள்தான். நமது ஆன்மாவின் கண்ணாடியாக செயல்படுவது கண்கள். அது வெளி உலகை காணும் ஜன்னலாக செயல்படுகிறது. கண்கள் உங்கள் அழகை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்துகிறது. நமது வாழ்க்கை முறையே, நமது கண்களின் ஆரோக்கியத்தை நிர்மாணிக்கும் விஷயம் ஆகும். நீண்ட நேரமாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, வேலை செய்பவர்கள் இதில் இருந்து தப்பிக்க முடியாது. கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு, கண்களை பராமரிப்பது முக்கியமானதாகும். மேலும் நீண்ட நேரமாக, கம்ப்யூட்டரில் அமர்ந்து கொண்டு தொடர்ச்சியாக வேலை செய்பவர்களுக்கு இது மிகவும் அவசியமானதாகும்.

கண்கள் எதுக்கு அடிக்கடி துடிக்குதுன்னு தெரியுமா? நீண்ட நேரமாக தொடர்ச்சியாக கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு, அந்த முழு நேர பளு சுமையே கண்களை பாதிக்கும் முக்கிய காரணி. இதற்கு பல காரணங்கள் உள்ளன. கம்ப்யூட்டர் திரைக்கு மிக அருகில் உட்கார்ந்திருத்தல், ஜன்னலில் இருந்து, திரையின் மீது படும் கண் கூசும் ஒளிவீச்சு, திரையின் மீதுள்ள தெளிவற்ற எழுத்துக்கள், திரையில் இருந்து உள்ள வசதியற்ற பார்வைக் கோணம், திரையின் மீது நீடித்த மற்றும் மாறாத இமையாத பார்வை போன்றவை இதற்கு காரணமாகின்றன.

கண்களை பராமரிப்பதே சிறந்த வழி. கண்நோய் அல்லது கண் வலி, தூசு, பிசிறு போன்றவை இருந்தால் பச்சிலைச்சாறு, தாய்ப்பால் அல்லது மற்றவர் சொல்லும் கண்ட கண்ட மருந்துகள் போன்றவற்றை கண்களில் போடவே கூடாது. இவை அனைத்தும், கண்களைக் நாள் போகப்போக பிரச்னையை உண்டாக்கும். எனவே காலதாமதம் செய்யாமல், கண் மருத்துவரிடம் செல்வது மிகவும் நல்லது. கண்களுக்கு வைட்டமின் "ஏ,பி இரண்டும் சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கீழே கூறிய உணவுகளில் வைட்டமின் "ஏபி அதிகமாக உள்ளது. முருங்கைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகள், எளிதாகக் கிடைக்கக் கூடிய பப்பாளிப் பழம் போன்றவற்றில் வைட்டமின் "ஏ,பி அதிக அளவு உள்ளது.

மேலும், மாம்பழம் கேரட், பால், வெண்ணெய், முட்டை, மீன், மீன் எண்ணெய் ஆகியவற்றிலும் இச்சத்து அதிகமாக உள்ளது. புளியம் பூக்களை அரைத்து கண்ணை சுற்றி பற்றுப்போட்டால் கண் வலி, கண் சிவப்பு குணமாகும். இங்கு சில கண் பராமரிப்பு டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் முழு நேர தொடர்ச்சியான கம்ப்யூட்டர் வேலையால், கண்களில் பணிச்சுமை ஏற்படாமல் பாதுகாக்கலாம்..

Saturday, March 14, 2015


More Than One Self-Occupied Properties – Tax implication


More Than One Self-Occupied Properties – Tax implication
It is important for an individual, who is planning to buy a second home, to understand the tax implications under the Income-Tax Act 1961 of owning and maintaining the second home.

Second House is Self-Occupied
If an individual owns more than one house property for his use, then any one property as per his choice is treated as self-occupied and its annual value is computed to be nil.

The second house is treated as being rented-out and its estimated rental income is treated as taxable income.

Second home is used as a holiday home
As the benefit of self-occupied property is available for only one home, the estimated annual rent will be considered as the taxable value.

Even vacant house has tax implications
If a property is treated as a Deemed to be Let out Property, it is effectively put at par with a let out property as far as taxation is concerned.

Hence, a notional rental value is considered as the gross taxable rent for such property. You are allowed to claim a flat deduction of 30% for repairs and maintenance charges.

Which option is better in case two houses are in possession?

If you have two houses to be self-occupied it is always better to rent it out at reasonable value or standard rent applicable in the area due to following reasons:

Will increase your wealth base and minimise your wealth tax bill
You can claim unrestricted interest deduction
You can claim benefit by way of deduction of municipal taxes
Your return will show feel good factor in terms of disposable income capacity
Second House is Let-Out
If the second house is let-out to a tenant, the actual rent received, subject to certain conditions, is treated as the taxable income under the head ‘Income from House Property’.

Deduction for Municipal Taxes
The taxes paid to the local authority, generally the municipal taxes, are allowed as deduction in the financial year, in which such taxes are actually paid.

This is irrespective of whether these taxes pertain to the current financial year or the earlier year. Therefore, an individual should keep a track of the municipal taxes paid and claim this deduction accordingly.

Interest Deduction
Whether the second house property is deemed to be let-out or actually let-out, the actual interest paid on the housing loan is allowed as deduction.

This is contrary to the case of a self-occupied property, wherein the maximum interest on housing loan is restricted to Rs 150,000 p.a. ( 2 Lakh from AY 2015-16), subject to certain conditions...

source :Tax Blog 


Friday, March 13, 2015

TRB announced the special teachers appointment:-


Tamilnadu Teachers Recruitment Board announced all the special teachers for P.E.T., Drawing and music will be appointed by only through the TRB Exam for the Govt. Schools. In Tamilnadu schools the special teachers for P.E.T., Drawing and music were appointed only on the basis of employment seniority and caste roaster.


CLICK HERE ΤΟ DOWNLOAD THE SYLLABUS

Thursday, March 12, 2015

தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகளில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் விளையாட்டுகளின் வகைகள்.

ஒவ்வொரு ஆண்டும்  விளையாட்டு வீரர்களின் நலனை கருத்தில்கொண்டு தமிழக அரசும்  சலுகைகளை வழங்கி வருகிறது.அதன்படி கடந்த 2013 ஆம் ஆண்டின் பொறியியல் கல்லூரி இட ஒதுக்கிட்டு விவரங்களை காண இங்கு சொடுக்கவும்.      
  


  

உடற்கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்குச் சில அறிவுரைகள்

  • உடற்கல்விப்  பாடம் கற்பிக்க,முடிந்தவரை நிழல் உள்ள  இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்
  • மாணவர்களைச் சூரியனைப் பார்த்து நிற்கும்படி நிறுத்தக் கூடாது.
  • மாணவர்கள் அரைக்கால் சட்டை, அரைக்கை பனியன் அணிந்து பயிற்சியில் பங்குபெறச் செய்தல் நலம்.                                                                                                                      
  • காலை பதினோரு மணி முதல் மாலை மூன்று மணிவரை உடற்கல்வி பாடம் கற்பிக்க தேர்ந்தெடுக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
  • மாணவர்கள் தன சுத்தம் ,உடல் தூய்மை கவனிக்க வேண்டும்.
  • தேவையான ஆயத்தப் பயிற்சிகள்(Warming-up) செய்யாமல் பயிற்சிகள் தொடங்கக்கூடாது .
  • மாணவர்களுக்குப்  பயிற்சிகளை சிறுகச் சிறுகப் பிரித்து கற்பித்து பிறகு முழுமையாகக் கற்பிக்க வேண்டும்.
  • எல்லா பயிற்சிகளிலும் ஆசிரியர் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
  • விளையாட்டுக் கருவிகள் ஆசிரியரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
  • பள்ளி வளாகத்தினுள் மாணவர்களை வரிசை கலையாமல் செல்ல   அறிவுறுத்த வேண்டும். 
  • கட்டளைச் சொற்கள் தெளிவாகவும், அழுத்தமாகவும் இருக்க வேண்டும்.
  • தேவையானபோது மட்டுமே ஊதலை(Whistle) பயன்படுத்த வேண்டும்.
  • மாணவர்களுக்கான தலைமைப்பண்பு(Leadership Quality)வளரும் வகையில் பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
  • மாணவர்களுக்கு உடல் நிலை சரியில்லாத போது  அவர்களுக்கு உடற்கல்வி கற்பிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • விளையாட்டுப் பயிற்சிகளினால் ஏற்படும் நன்மைகளை மாணவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
  • சுருங்கக்கூறின் மாணவன்  அவனை முழுமனிதனாக ஆக்குவதே குறிக்கோளாகக் கொண்டு ஆசிரியர் செயல் பட வேண்டும்.


Wednesday, March 11, 2015

உடம்பை  வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே ...

'உடம்பை  வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே ' என்ற திருமூலரின் பாடல்,உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. சீரான நல்வாழ்வுக்கு ஆரோக்கியமான உடல் நலம் அவசியம்.இதற்கு உடற்பயிற்சிகள்  அவசியம். இரஷ்யா ,ஜெர்மனி  போன்ற மேலை நாடுகளில், அனைத்து மக்களும் உடற்பயிற்சிகளிலும்,விளையாட்டுகளிலும் முழுமையாக கொள்வதால் அந்நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி வாகை சூடுகிறது .இது போன்று நம் நாட்டிலும் அனைத்து மக்களும் உடற்பயிற்சியிலும் விளையாட்டுகளிலும் முழுமையாக ஈடுபாடு கொண்டால் ஒலிம்பிக் போட்டிகளிலும் நம் நாடும் வெற்றி வாகைசூடும் என்பதில் ஐயமில்லை..