1

இத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் பல்வேறு நண்பர்களிடமிருந்தும், பல்வேறு இணைய தளங்களிலும், செய்திதாள்கள் மூலமும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் இங்கு தொகுத்து பகிரப்படுகிறது.. எனவே இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தன்மை கூற இயலாது.. இத்தகவல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது....

Monday, April 6, 2015

மொபைல் பேங்கிங்

  இன்றைய அவசர காலத்தில் யாருக்கும் தனது சொந்த வேலைகளை கவனிக்க கால அவகாசம் கிடைப்பதில்லை.அது போன்ற அவசர வேலைகாரர்களுக்கு உதவ இப்போது அலைபேசி மிகவும் உதவுகிறது.அதன் மூலம் வங்கி பரிவர்த்தனைகளை செய்து கொள்ள கை கொடுக்கும்  மொபைல் பேங்கிங் இன்று பலரால் பயன்படுத்தப்பட்டுவருகிறது.இதனால் வங்கி சென்று வரிசையில் நின்று பணபரிவர்த்தனை செய்ய நேரம் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டாம்.
.     விரல் நுனியில் அனைத்தையும் வங்கிப்பணிகள் அனைத்தையும் பெறலாம்.வங்கி கணக்கு இருப்பு, காசோலை புத்தகத்திற்கான கோரிக்கை போன்ற பல சேவைகளை வங்கிகள் வழங்குகின்றன.இவை அனைத்தையும் இப்போது  மொபைல் பேங்கிங் வழியாக செய்ய முடியும்.ஸ்மார்ட் போன் வரவுக்கு பிறகு மொபைல் பேங்கிங் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.
  இந்த ஆண்டு இறுதிக்குள், ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் உலகின் 2வது நாடாக இந்தியா திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு ஏற்ப வங்கிகள் ஆன்டிராய்டு, விண்டோஸ் இயங்குதளத்துக்கான அப்ளிகேஷன்களை உருவாக்கியுள்ளன. இவை பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன.
  வாடிக்கையாளர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒன் டைம் பாஸ்வேர்டை ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகள் வழங்குகின்றன. இது தவிர இன்டர்நெட் பேங்கிங்கும் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  இது சமுக விரோதிகள் கண்களை உறுத்தியுள்ளதால் வங்கி கணக்கு ரகசியங்களை திருடும் வைரஸ்களை பலர் உருவாக்கி வருகின்றனர்.எனவே நீங்கள் கீழ் வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள்வதன் மூலம் உங்கள் வங்கிப் பணிகளை பாதுகாப்பாக அலைபேசி மூலம் கையாளலாம்.




>   இதுவரை  உங்கள் அலை பேசிக்கு கடவு சொல் [ பாஸ்வேர்ட்]  நீங்கள் வைக்க வில்லை என்றால் முதலில் கடவு சொல் [ பாஸ்வேர்ட்] வைக்கவும்.

>  அலைபேசியில்  எஸ்.எம்.எஸ். அலர்ட்[ஒலி]வருமாறு பதிவு செய்யவும்.

>   அலைபேசியில் கண்ட அப்ஸ்களை வைத்து அதன் மூலம் வைரஸ் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.குறிப்பாக இன்டர்நெட் வசதி கொண்ட நவீன அலைபேசிகளை வைரஸ்கள் பாதிக்கக்கூடிய ஆபத்து அதிகம்.

>   உங்கள் அலைபேசியில் ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யவும்.இணையதளத்தில் இருந்து எந்த விதமான கோப்புகளையும் டவுன்லோட் செய்ய வேண்டாம். உதராணமாக பயன்பாடுகள், விளையாட்டுகள், படங்கள், இசை போன்றவற்றைதான்.
 .
>  டெபிட் / கிரெடிட் கார்ட் எண்கள், சிவிவி எண்கள் மற்றும் பின் நம்பர் போன்ற ரகசிய தகவல்களை அலைபேசியில்  பதிவு செய்ய வேண்டாம். உங்களது அலைபேசி தொலைந்து போனால் உடனே வங்கியுடன் தொடர்பு கொண்டு மொபைல் பேங்கிங் வசதியை செயலிழக்கச் செய்யுங்கள்.

 >  மொபைல் பேங்கிக்கிற்கான ரகசிய எண்களை அவ்வப்போது மாற்றுங்கள். 

>  மற்றவர்கள் எளிதாக கண்டு கொள்ளும்படியான வெளிப்படையானகடவு சொற்களாக [பாஸ்வேர்டு]  அதாவது உங்கள் அல்லது உறவினர்கள் பிறப்பு பெயர், தேதி  பயன்படுத்த வேண்டாம்.

>  வை ஃபை இணைப்பை பயன்படுத்திக்கொண்டிருக்கும் போது  மொபைல் பேங்கிங் செய்வது பாதுகாப்பானதல்ல.தவிர்க்கவும்.அதேபோல்  ப்ளூடூத்களை பயன் படுத்திக்கொண்டிருந்தால் அதையும்  துண்டியுங்கள்.

 மேற்கண்ட விஷயங்களை முறையாக பின்பற்றினாலும் மொபைல் பேங்கிங் 100 சதவீதம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று கூற முடியாது. ஆனாலும் 90 சதவிகிதம் நாம்  ஒரு பயன்பாட்டாளராக உங்கள் பரிமாற்றங்கள் பாதுகாப்பாக இ்ருப்பதைநம் பக்கம் இருந்து  உறுதி செய்து கொள்ளலாம்.

 ஏடிஎம் இலவச பரிவர்த்தனை குறைக்கப்பட்ட நிலையில் ஏடிஎம் கார்டுகள் மூலம் ஆன்லைனில் 3டி செக்யூர்டு பாஸ்வேர்டு அல்லது ஏடிஎம் பின் மூலம் பேமன்ட் வசதிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

இதற்கு 

தனது தனிப்பட்ட கம்ப்யூட்டர்கள் மூலமே பரிவர்த்தனை செய்வது,

வைரஸ் தடுப்பு சாப்ட்வேர் நிறுவி தகவல்களை பாதுகாப்பது,

 வங்கிகள் வழங்கும் விர்சுவல் கீபேர்டு மூலம் பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்களை நிரப்புவதுமுழுமையான பாதுகாப்பை உறுதி செய்யும்.

எந்த ஒரு வங்கியும் வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கி கணக்கு,ஏடிஎம் கார்டு எண்,சிவிவி எண்,கடவு சொற்கள் [ பாஸ்வேர்டு]போன்ற  விவரங்களை கேட்பதில்லை.என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 இதுகுறித்து எச்சரிக்கை குறுந்தகவல்களை ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வங்கிகள் அனுப்பி வருகின்றன.

அப்படி ஏதும் அழைப்பு வந்தால் தயக்கம் இன்றி துண்டித்து விடுங்கள்.
மீண்டும்,மீண்டும் வந்தால் வங்கியை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்.இது போன்ற செயல்களை முடிந்தவரை நீங்கள் கையாண்டால் போதும் உங்கள் மொபைல் வங்கி சேவை சிறப்பாக செயல் படும்...

நன்றி: வலைப்பதிவு நண்பர்