Monday, August 31, 2015
15G மற்றும் 15H படிவங்கள்... சிக்கல் இல்லாமல் தாக்கல் செய்வது எப்படி?
இன்றைய தேதியில் வருமான வரிச் செலுத்துவோரிடம் வரிச் சேமிப்பு முதலீடு பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்துக் கொண்டிருக் கிறது. இருப்பினும் புதிதாக வரும் திருத்தங்கள் மற்றும் மாறுதல்கள் காரணமாகப் பலருக்கு சரியான விவரங்கள் தெரியாமல் அல்லது பழைய விவரங்களை வைத்துக்கொண்டு வருமான வரியைத் தாக்கல் செய்யும்போது தவறாகப் படிவத்தைத் தாக்கல் செய்து, பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு அபராதம் செலுத்துகிறார்கள்.
இப்படி செலுத்தும் அபராத தொகை, நாம் வருமான வரி செலுத்தியிருக்க வேண்டிய தொகையைவிடப் பலமடங்கு அதிகமாக இருப்பதே. இதற்கு நல்லதொரு உதாரணம்தான் பார்ம் 15G மற்றும் 15H படிவங்களைத் தவறாக சமர்ப்பிப்பது.
பெரும்பாலான வரிதாரர்கள் இந்தப் படிவங்களைப் பற்றிச் சரியாகத் தெரிந்துகொள்ளாமல் படிவத்தைத் தாக்கல் செய்து பிரச்னைகளில் சிக்கிக்கொள் கிறார்கள். இதுமாதிரியான பிரச்னைகளில் சிக்காமல் இந்தப் படிவங்களை எப்படித் தாக்கல் செய்யவேண்டும், யார் தாக்கல் செய்யலாம் என்று விளக்குகிறார் ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார்.
ஏன் இந்த ஃபார்ம்?
“வங்கியில் செய்யப்பட்டுள்ள டெபாசிட்கள் (எஃப்.டி மற்றும் ஆர்.டி) மூலம் வருடத்துக்கு 10,000 ரூபாய்க்குமேல் வட்டி வருமானம் கிடைத்தால், அந்தத் தொகைக்கு 10% டிடிஎஸ் (Tax Deductable at Source) வசூலிக் கப்படும். வங்கியிடம் பான் எண்ணை தராமல் இருந்தால் டிடிஎஸ் 20% வசூலிக்கப்படும். வங்கி வட்டியைத் தவிர, வேறு வருமானம் இல்லாதவர்கள், இந்த டிடிஎஸ் வரியிலிருந்து விடுபட, வங்கிக் கிளையில் 15G/15H படிவத்தைப் பூர்த்திச் செய்து தரவேண்டும்.
அதேபோல, கடனுக்குத் தந்திருக்கும் தொகை, கடன் பத்திரங்கள், பாண்டுகள், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள், தேசியப் பாதுகாப்பு திட்ட பத்திரங்கள், நிறுவன டெபாசிட்டுகள் ஆகியவைகள் மூலம் கிடைக்கும் வட்டித் தொகை ஆண்டுக்கு 5,000 ரூபாய்க்குமேல் இருந்தால், அவையும் வருமான வரிக்கு உட்பட்டவைகளே. இந்த வகையில் கிடைக்கும் வருமானத்துக் கும் 15G/15H படிவங்களைப் பூர்த்திச் செய்யலாம்.
இந்தப் படிவத்தைப் பூர்த்திச் செய்து தருவதால் டிடிஎஸ் வரியிலிருந்து விடுபடலாமே தவிர, வரிச் சலுகை பெற முடியாது. இந்த 15G/15H படிவத்தைப் பூர்த்திச் செய்து தருவதால், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு (வருமான வரி வரம்புக்கு உட்பட்ட வருமானம் இருந்தா லும்) விலக்குக் கிடையாது.
இதே 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்கள் மட்டும் 15H படிவங்களைத் தாக்கல் செய்வதை வைத்து வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாமல் இருக்கலாம். அதுவும் அடிப்படை வருமான வரி வரம்புக்கு உட்பட்ட வருமானத்தில் இருக்க வேண்டும்.
இந்தப் படிவங்களை இந்தியாவில் வசிப்பவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். என்ஆர்ஐ கள் பயன்படுத்த முடியாது.
15G படிவம் யாருக்கு?
a. தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பம் மற்றும் கூட்டு நபர்கள் (அசோசியேஷன் ஆஃப் பெர்சன்ஸ்) இந்தப் படிவங்களைப் பயன்படுத்த முடியும். 60 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் 15G படிவத்தைப் பயன்படுத்தலாம்.
b. கடந்த நிதியாண்டு வருமான வரி செலுத்தாத நபர்கள் மட்டுமே இந்தப் படிவங்களை நிரப்பி டிடிஎஸ்-ஐ தவிர்க்கலாம்.
c. ஒருவரின் வரிக்கு உட்பட்ட மொத்த வருமானம் ஆண்டுக்கு வருமான வரி அடிப்படை வரம்பான ரூ.2.5 லட்சத்துக்குக் குறைவாக இருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் 15G படிவத்தைப் பூர்த்திச் செய்யலாம்.
15H படிவம் யாருக்கு?
a.60 வயது பூர்த்தி அடைந்த வர்கள் 15H படிவத்தைச் சமர்ப்பிக்கலாம்.
b.மூத்த குடிமக்களுக்கான (60 முதல் 80 வயது வரை) அடிப்படை வரி வரம்பான ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வரிக்கு உட்பட்ட மொத்த வருமானம் இருந்தால் 15H படிவத்தைத் தாக்கல் செய்து டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்க்கலாம்.
அதேபோல, மிகவும் மூத்த குடிமக்கள் (80 வயதுக்கு மேல்) 5 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் இருந்தால், 15H படிவத்தைச் சமர்ப்பித்து டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்க்கலாம். நிதியாண்டின் எந்தத் தேதியில் 60 வயது அல்லது 80 வயது பூர்த்தி அடைந்தாலும் அதற்கான சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எப்போது, எங்கு தாக்கல் செய்வது?
இந்தப் படிவத்தை நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் செலுத்தினால்தான் அந்த ஆண்டு டிடிஎஸ் பிடித்தத் திலிருந்து விடுபட முடியும்.
ஒரு வங்கிக் கிளையில் நமக்கு ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் இருக்கிறது. அதன் மூலம் நமக்கு ஆண்டுக்கு 12% வட்டியில் 12,000 ரூபாய் வட்டியாகக் கிடைக்கிறது என்றால், அந்தக் கிளையில் 15G/ 15H படிவத்தைப் பூர்த்திச் செய்து பான் எண்ணுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
இப்படி எத்தனை வங்கிகளில் டெபாசிட்கள் இருந்தாலும் வங்கிக்குத் தனித் தனியாக 15G/15H படிவங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். ஒரு வங்கியின் பல கிளைகளில் டெபாசிட் போட்டிருந்தால், ஏதாவது ஒரு கிளையில் இந்தப் படிவத்தைக் தந்தால் போதும்.
இந்தப் படிவத்தைப் பூர்த்திச் செய்து வங்கியிடம் சமர்ப்பித்த தற்குச் சான்றாக வங்கியிட மிருந்து அத்தாட்சிகளைக் கண்டிப்பாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.
அதேபோல, ஒரு நிறுவனத்தின் கடன் பத்திரங்கள், பாண்டுகள் போன்றவற்றில் முதலீடு செய்திருந்து அதற்கு வட்டி வந்துகொண்டிருந்தால் நாம் முதலீடு செய்த நிறுவனத்தின் இணையம் மூலமாக 15G/15H படிவத்தைப் பூர்த்திச் செய்யலாம்.
அப்படி இணையத்தில் பூர்த்திச் செய்ய முடியாதவர்கள் பூர்த்திச் செய்த 15G/15H படிவத்தை நிறுவனத்தின் தலைமையகத்துக்குப் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். நீங்கள் 15G/15H படிவத்தை அனுப்பியதற்குச் சாட்சியே அந்தப் பதிவுத் தபால் மூலம் கிடைக்கும் அத்தாட்சி கடிதம்தான்’’என்றார்.
டிடிஎஸ் பிடிக்கப்பட்டுவிட்டால்?
வங்கி டெபாசிட் மூலம் வட்டி வருமானம் 10,000 ரூபாய்க்குக் கூடுதலாக இருந்து வங்கி டிடிஎஸ் பிடித்தம் செய்துவிட்டால், நாம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்து, வருமான வரித் துறையிடமிருந்து தான் டிடிஎஸ் பிடித்தம் செய்த பணத்தை மீண்டும் பெற வேண்டியிருக்கும்.
இப்படி வருமான வரித் தாக்கல் செய்து, நம் பணத்தை நாமே எதிர்பார்ப்பதைவிட நிதி ஆண்டின் தொடக்கத்தில் வங்கி களில் இந்தப் படிவங்களைத் தாக்கல் செய்தால் வரிக் கணக்கு தாக்கல் செய்து பணத்தைத் திரும்பப் பெறும் சிரமத்துக்கு ஆளாக வேண்டியதில்லை. பான் எண் உள்ளவர்களுக்கு மட்டுமே டிடிஎஸ் பிடித்தம் திரும்ப வழங்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
தவறாகத் தாக்கல் செய்தால்?
இந்தப் படிவங்களைத் தவறாகத் தாக்கல் செய்தால், அதாவது, இந்தப் படிவத்துக்குத் தகுதி இல்லாதவர்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தி டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்த்தால் அவர்களுக்கு மூன்று மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை சிறைத் தண்டனையும், அபராத மும் விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது” என்று என்று கூறி முடித்தார் சதீஷ்குமார்.
இனி 15G/15H படிவங்களைச் சரியாகத் தாக்கல் செய்து, டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்த்து, சட்டரீதியாகப் பாதுகாத்துக் கொள்ளலாமே!
விகடன்
இன்றைய தேதியில் வருமான வரிச் செலுத்துவோரிடம் வரிச் சேமிப்பு முதலீடு பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்துக் கொண்டிருக் கிறது. இருப்பினும் புதிதாக வரும் திருத்தங்கள் மற்றும் மாறுதல்கள் காரணமாகப் பலருக்கு சரியான விவரங்கள் தெரியாமல் அல்லது பழைய விவரங்களை வைத்துக்கொண்டு வருமான வரியைத் தாக்கல் செய்யும்போது தவறாகப் படிவத்தைத் தாக்கல் செய்து, பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு அபராதம் செலுத்துகிறார்கள்.
இப்படி செலுத்தும் அபராத தொகை, நாம் வருமான வரி செலுத்தியிருக்க வேண்டிய தொகையைவிடப் பலமடங்கு அதிகமாக இருப்பதே. இதற்கு நல்லதொரு உதாரணம்தான் பார்ம் 15G மற்றும் 15H படிவங்களைத் தவறாக சமர்ப்பிப்பது.
பெரும்பாலான வரிதாரர்கள் இந்தப் படிவங்களைப் பற்றிச் சரியாகத் தெரிந்துகொள்ளாமல் படிவத்தைத் தாக்கல் செய்து பிரச்னைகளில் சிக்கிக்கொள் கிறார்கள். இதுமாதிரியான பிரச்னைகளில் சிக்காமல் இந்தப் படிவங்களை எப்படித் தாக்கல் செய்யவேண்டும், யார் தாக்கல் செய்யலாம் என்று விளக்குகிறார் ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார்.
ஏன் இந்த ஃபார்ம்?
“வங்கியில் செய்யப்பட்டுள்ள டெபாசிட்கள் (எஃப்.டி மற்றும் ஆர்.டி) மூலம் வருடத்துக்கு 10,000 ரூபாய்க்குமேல் வட்டி வருமானம் கிடைத்தால், அந்தத் தொகைக்கு 10% டிடிஎஸ் (Tax Deductable at Source) வசூலிக் கப்படும். வங்கியிடம் பான் எண்ணை தராமல் இருந்தால் டிடிஎஸ் 20% வசூலிக்கப்படும். வங்கி வட்டியைத் தவிர, வேறு வருமானம் இல்லாதவர்கள், இந்த டிடிஎஸ் வரியிலிருந்து விடுபட, வங்கிக் கிளையில் 15G/15H படிவத்தைப் பூர்த்திச் செய்து தரவேண்டும்.
அதேபோல, கடனுக்குத் தந்திருக்கும் தொகை, கடன் பத்திரங்கள், பாண்டுகள், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள், தேசியப் பாதுகாப்பு திட்ட பத்திரங்கள், நிறுவன டெபாசிட்டுகள் ஆகியவைகள் மூலம் கிடைக்கும் வட்டித் தொகை ஆண்டுக்கு 5,000 ரூபாய்க்குமேல் இருந்தால், அவையும் வருமான வரிக்கு உட்பட்டவைகளே. இந்த வகையில் கிடைக்கும் வருமானத்துக் கும் 15G/15H படிவங்களைப் பூர்த்திச் செய்யலாம்.
இந்தப் படிவத்தைப் பூர்த்திச் செய்து தருவதால் டிடிஎஸ் வரியிலிருந்து விடுபடலாமே தவிர, வரிச் சலுகை பெற முடியாது. இந்த 15G/15H படிவத்தைப் பூர்த்திச் செய்து தருவதால், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு (வருமான வரி வரம்புக்கு உட்பட்ட வருமானம் இருந்தா லும்) விலக்குக் கிடையாது.
இதே 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்கள் மட்டும் 15H படிவங்களைத் தாக்கல் செய்வதை வைத்து வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாமல் இருக்கலாம். அதுவும் அடிப்படை வருமான வரி வரம்புக்கு உட்பட்ட வருமானத்தில் இருக்க வேண்டும்.
இந்தப் படிவங்களை இந்தியாவில் வசிப்பவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். என்ஆர்ஐ கள் பயன்படுத்த முடியாது.
15G படிவம் யாருக்கு?
a. தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பம் மற்றும் கூட்டு நபர்கள் (அசோசியேஷன் ஆஃப் பெர்சன்ஸ்) இந்தப் படிவங்களைப் பயன்படுத்த முடியும். 60 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் 15G படிவத்தைப் பயன்படுத்தலாம்.
b. கடந்த நிதியாண்டு வருமான வரி செலுத்தாத நபர்கள் மட்டுமே இந்தப் படிவங்களை நிரப்பி டிடிஎஸ்-ஐ தவிர்க்கலாம்.
c. ஒருவரின் வரிக்கு உட்பட்ட மொத்த வருமானம் ஆண்டுக்கு வருமான வரி அடிப்படை வரம்பான ரூ.2.5 லட்சத்துக்குக் குறைவாக இருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் 15G படிவத்தைப் பூர்த்திச் செய்யலாம்.
15H படிவம் யாருக்கு?
a.60 வயது பூர்த்தி அடைந்த வர்கள் 15H படிவத்தைச் சமர்ப்பிக்கலாம்.
b.மூத்த குடிமக்களுக்கான (60 முதல் 80 வயது வரை) அடிப்படை வரி வரம்பான ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வரிக்கு உட்பட்ட மொத்த வருமானம் இருந்தால் 15H படிவத்தைத் தாக்கல் செய்து டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்க்கலாம்.
அதேபோல, மிகவும் மூத்த குடிமக்கள் (80 வயதுக்கு மேல்) 5 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் இருந்தால், 15H படிவத்தைச் சமர்ப்பித்து டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்க்கலாம். நிதியாண்டின் எந்தத் தேதியில் 60 வயது அல்லது 80 வயது பூர்த்தி அடைந்தாலும் அதற்கான சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எப்போது, எங்கு தாக்கல் செய்வது?
இந்தப் படிவத்தை நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் செலுத்தினால்தான் அந்த ஆண்டு டிடிஎஸ் பிடித்தத் திலிருந்து விடுபட முடியும்.
ஒரு வங்கிக் கிளையில் நமக்கு ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் இருக்கிறது. அதன் மூலம் நமக்கு ஆண்டுக்கு 12% வட்டியில் 12,000 ரூபாய் வட்டியாகக் கிடைக்கிறது என்றால், அந்தக் கிளையில் 15G/ 15H படிவத்தைப் பூர்த்திச் செய்து பான் எண்ணுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
இப்படி எத்தனை வங்கிகளில் டெபாசிட்கள் இருந்தாலும் வங்கிக்குத் தனித் தனியாக 15G/15H படிவங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். ஒரு வங்கியின் பல கிளைகளில் டெபாசிட் போட்டிருந்தால், ஏதாவது ஒரு கிளையில் இந்தப் படிவத்தைக் தந்தால் போதும்.
இந்தப் படிவத்தைப் பூர்த்திச் செய்து வங்கியிடம் சமர்ப்பித்த தற்குச் சான்றாக வங்கியிட மிருந்து அத்தாட்சிகளைக் கண்டிப்பாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.
அதேபோல, ஒரு நிறுவனத்தின் கடன் பத்திரங்கள், பாண்டுகள் போன்றவற்றில் முதலீடு செய்திருந்து அதற்கு வட்டி வந்துகொண்டிருந்தால் நாம் முதலீடு செய்த நிறுவனத்தின் இணையம் மூலமாக 15G/15H படிவத்தைப் பூர்த்திச் செய்யலாம்.
அப்படி இணையத்தில் பூர்த்திச் செய்ய முடியாதவர்கள் பூர்த்திச் செய்த 15G/15H படிவத்தை நிறுவனத்தின் தலைமையகத்துக்குப் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். நீங்கள் 15G/15H படிவத்தை அனுப்பியதற்குச் சாட்சியே அந்தப் பதிவுத் தபால் மூலம் கிடைக்கும் அத்தாட்சி கடிதம்தான்’’என்றார்.
டிடிஎஸ் பிடிக்கப்பட்டுவிட்டால்?
வங்கி டெபாசிட் மூலம் வட்டி வருமானம் 10,000 ரூபாய்க்குக் கூடுதலாக இருந்து வங்கி டிடிஎஸ் பிடித்தம் செய்துவிட்டால், நாம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்து, வருமான வரித் துறையிடமிருந்து தான் டிடிஎஸ் பிடித்தம் செய்த பணத்தை மீண்டும் பெற வேண்டியிருக்கும்.
இப்படி வருமான வரித் தாக்கல் செய்து, நம் பணத்தை நாமே எதிர்பார்ப்பதைவிட நிதி ஆண்டின் தொடக்கத்தில் வங்கி களில் இந்தப் படிவங்களைத் தாக்கல் செய்தால் வரிக் கணக்கு தாக்கல் செய்து பணத்தைத் திரும்பப் பெறும் சிரமத்துக்கு ஆளாக வேண்டியதில்லை. பான் எண் உள்ளவர்களுக்கு மட்டுமே டிடிஎஸ் பிடித்தம் திரும்ப வழங்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
தவறாகத் தாக்கல் செய்தால்?
இந்தப் படிவங்களைத் தவறாகத் தாக்கல் செய்தால், அதாவது, இந்தப் படிவத்துக்குத் தகுதி இல்லாதவர்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தி டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்த்தால் அவர்களுக்கு மூன்று மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை சிறைத் தண்டனையும், அபராத மும் விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது” என்று என்று கூறி முடித்தார் சதீஷ்குமார்.
இனி 15G/15H படிவங்களைச் சரியாகத் தாக்கல் செய்து, டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்த்து, சட்டரீதியாகப் பாதுகாத்துக் கொள்ளலாமே!
விகடன்
குடும்ப அட்டை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
1 ,குடும்ப அட்டை பெற விண்ணப்ப படிவம்?
தமிழக அரசு புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பப்படிவத்தினை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்ணயித்துள்ளது . இப்படிவம் http://www.consumer.tn.gov.in/pdf/ration_t.pdf என்ற இணைய தளத்தில் உள்ளது. பயன்படுத்த விரும்புவோர் படிவத்தினை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து எடுத்து பிரதிகளை எடுத்துக் கொள்ளலாம்.
2, விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணைப்பு ஆவணங்கடன் அவர் வசிக்கும் பகுதிக்கு உரிய உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளர் (மண்டல) அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் அவர் வசிக்கும் பகுதி எந்த உதவி ஆணையாளர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது என்பது தொடர்பாக சந்தேகம் எழுந்தால் தொலைபேசி மூலம் இந்த அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
சென்னை தவிர பிற மாவட்டங்களுக்கு விண்ணப்பதாரர் வசிக்கும் பகுதியைச் சார்ந்த உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வட்ட வழங்கல் அலுவலர், உதவி பங்கீட்டு அலுவலர்*, (கோயம்புத்தூர் நகரம் மட்டும்) குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்வார்கள்.
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்புகை சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் தனது விண்ணப்பத்தினை அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். இருந்தபோதிலும் விண்ணப்பம் சென்றடைந்ததை உறுதி செய்துக் கொள்ள ஆதாரமாக ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைப்பது நல்லது.
3, புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு விதிமுறைகள் என்னென்ன?
தனியாக புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையவர் யார்?
1). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் இந்திய குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
2). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தனி சமையலறையுடன் தனியாக வசிக்க வேண்டும்.
3). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
4). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் இந்தியாவில் எங்கும் குடும்ப அட்டை பெற்றிருத்தல் கூடாது.
5). விண்ணப்பதாரரோ மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் பெயர் தமிழ்நாட்டில் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இடம் பெற்றிருக்க கூடாது.
6). விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நெருங்கிய உறவினராக இருத்தல் வேண்டும்.
4, குடும்ப அட்டை மனுவினை பரிசீலிக்க பரிசீலனைக்காக உள்ள நடைமுறைகள் என்ன ?
தங்களால் பூர்த்தி செய்யப்*பட்ட விண்ணப்பம் தல ஆய்வுக்கு அனுப்பப்படும். தல ஆய்வுக்கு செல்லும் அலுவலர் விண்ணப்பதாரரின் வீட்டை தணிக்கை செய்து மனுதாரர் முகவரியில் வசிப்பதையும் தனியாக சமையல் செய்வதையும் மற்றும் எரிவாயு இணைப்பு இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்து உறுதி செய்து கொள்வார்.
மனுதாரரின் வீட்டில் ஆய்வுக்கு வரும் அலுவலரின் அடையாள அட்டையை ( அலுவலக அடையாள அட்டை) அவர் ஆய்வை துவக்குவதற்கு உட்படும் முன் மனுதாரர் கேட்கலாம். உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதன் அலுவலர்களின் நேர்மை மற்றும் அவர்கள் கனிவாக நடந்துக்கொள்வதை உறுதி செய்ய விரும்புகிறது. இத்துறை அலுவலர்கள் மற்றும் ஆய்வு அலுவலரின் முறையற்ற நடத்தை மற்றும் கையூட்டு கேட்பு தொடர்பான புகார்களை மனுதாரர் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாக ஆணையாளர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அவர்களுக்கு தயக்கமின்றி தெரிவிக்கலாம்.
மனுதாரர் பூர்த்தி செய்து உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலகத்தில் கொடுத்த புதிய குடும்ப அட்டை மனு பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தணிக்கைக்கு வருவார்கள். 30 நாட்களுக்குள் தணிக்கை அலுவலர்கள் வரவில்லை என்றால் உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் கேட்கலாம்.
அதன்பிறகு, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்/ உதவி அணையாளர் மேற்கூறப்பட்ட நிபந்தனைகள்படி விண்ணப்பம் தகுதியுடையதாக இருப்பின், விண்ணப்பம் ஒப்புதல் அளிக்கப்பட்டு குடும்ப அட்டை அச்சடிக்க அனுப்பப்படும்.
5. மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா?
கூடுதல் ஆவணங்கள் அளிக்கப்பட வேண்டியது இருந்தால் தவிர, மனுதாரர் 30 நாட்களுக்கு முன்னதாக உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொள்ள தேவையில்லை.
விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் மனுவின் மீதான இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க / மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.
விண்ணப்பம் தகுதியுடையதாக இருந்தால், குடும்ப அட்டை அச்சிட அனுப்பப்படும். அச்சிடப்பட்ட குடும்ப அட்டை உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் பெறப்பட்டவுடன்* அலுவலகத்திலிருந்து ஒப்புகைச்சீட்டுடன் 15 தினங்களுக்குள் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ளுமாறு அஞ்சல் அட்டை மனுதாரருக்கு அனுப்பப்படும்.
ஒரு வேளை, விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்ட காரணத்தை விண்ணப்பித்த நாளிலிருந்து 60 நாட்களுக்குள் மனுதாரருக்கு அஞ்சல் அட்டை மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்ப படிவத்தில் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் குறிப்பிட்டிருந்தால், விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட இறுதி முடிவின் நிலையினை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடமிருந்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
6, விண்ணப்பதாரர் தனது குடும்ப அட்டையினை எவ்விதம் பெற்றுக் கொள்ள வேண்டும் ?
குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலகத்தில் தயாராக உள்ளது என்ற தகவலை விண்ணப்பதாரர் பெறப்பட்டவுடன், 15 தினங்கக்குள் நேரடியாக திங்கள் அல்லது வெள்ளிக் கிழமை அல்லது அஞ்சல் அட்டை, சிக்கன சேமிப்பு தகவல் / மின்அஞ்சல் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பம் சமர்ப்பித்த பொழுது பெறப்பட்ட அசல் ஒப்புகை சீட்டுடன் கொடுத்து குடும்ப அட்டையினை பெற்றுக் கொள்ளலாம்.
ஒருவேளை, அசல் குடும்ப அட்டை தொலைந்து விட்டால் , நகல் அட்டை பெற விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக மனுதாரர் குடும்ப அட்டையின் முதல் பக்கமும் கடைசி பக்கமும் நகல் எடுத்து அல்லது குடும்ப அட்டை எண் ,கடையின் குறியீடு எண் ஆகியவற்றை பாதுகாப்பாக குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வேளை, குடும்ப தலைவர் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள வர இயலவில்லை என்றால் குடும்ப தலைவர் குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் அதிகாரம் அளிப்பு கடிதத்துடன் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள அனுப்பலாம். குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள வரும் உறுப்பினரின் கையொப்பத்தினை மனுதாரர் மேலொப்பம் செய்து அங்கீகாரம் அளிப்பு கடிதம் அளிக்க வேண்டும். இந்த அதிகாரம் வழங்கப்பட்ட நபர் விண்ணப்பம் வழங்கிய பொழுது பெறப்பட்ட அசல் ஒப்புகைச் சீட்டினை சமர்ப்பித்து குடும்ப அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.
உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலர் அங்கிகாரம் செய்யப்பட்ட நபர் சந்தேகப்படும் வகையில் இருப்பின் குடும்ப அட்டை வழங்குவதை மறுக்கலாம்.
புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?
தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெற ரூ.5/- கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்த தொகை சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர் / வட்டவழங்கல் அலுவலகத்தில் செலுத்தப்படும்.
7, ரேஷன் கார்டு விண்ணப்பித்து 60 நாட்களுக்கு மேல் தாமதமானால் மனுதாரர் என்ன செய்யலாம்?
ரேஷன் கார்டு விண்ணப்பித்து 60 நாட்களுக்கு மேல் தாமதமானால் மனுதாரர் என்ன செய்யலாம்?
விண்ணப்பதாரர் உதவி ஆணையாளர் அல்லது வட்ட வழங்கல் அலுவலரை சந்தித்து காலதாமதமான காரணத்தை அறியலாம்.
விண்ணப்பம் வேண்டுமென்றே தாமதம் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர் மற்றும் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை நகரம் அல்லது புறநகர் பகுதிகளில் விண்ணப்பதாரர் துணை ஆணையாளர் (நகரம்)வடக்கு, துணை ஆணையாளர் (நகரம்) தெற்கு அவர்களிடம் பேசலாம்.
மாவட்டங்களில் மனுதாரர் சம்பந்தப்பட்ட மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை அணுகலாம்.
உதவி ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர்கள் உரிய பதில் அளிக்கவில்லை எனில், தேவைப்படின் மனுதாரர் மின் அஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் ஆணையாளர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடம் முறையிடலாம்.
8, ரேஷன் கார்டு விண்ணப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் யாரிடம் முறையீடு செய்வது ?
சென்னை நகர் மற்றம் புற நகர் பொறுத்த வரையில் துணை ஆணையாளர் (நகரம்) வடக்கு மற்றும் துணை ஆணையாளர் (நகரம்) தெற்கு, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அவர்களிடம் மேல் முறையீடு செய்யலாம் .
பிற பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல் முறையீடு செய்யலாம்.
9, ரேஷன் கார்டு விண்ணப்பத்தில் பொய்யான அல்லது தவறான தகவல்களை அளித்தால்?
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு தோராயமாக ஆண்டுக்கு ரூ.2000/- மானிய செலவு ஆகிறது என்பதை விண்ணப்பதாரர் அறிந்து கொள்ள வேண்டும். எனவே குடும்ப உறுப்பினர் பற்றிய தவறான விவரங்கள் மற்றும் தவறான முகவரி அளித்தல் போன்றவை பொது விநியோக திட்ட பொருட்களை கடத்துதலுக்கு வழிகோலும் என்பதுடன் 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பண்ட சட்டம் பிரிவு 7 ன் கீழ் தண்டனைக்குரியதாகும். இத்தகைய விண்ணப்பதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் சட்டப் படி தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் சரியான குடும்ப உறுப்பினரின் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
10, குடும்ப அட்டைகளின் வகைகள்: (விருப்பங்களின் அடிப்படையில் )
அனைத்து அத்தியாவசிய பொருட்கள் .குடும்ப அட்டைகள் ( பச்சை நிற அட்டைகள் ) அரிசி மற்றும் இதர இன்றியமையாப் பொருட்கள் பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு பச்சை நிற குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன.
சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் ( வெள்ளை நிற குடும்ப அட்டைகள்) அரிசிக்கு பதிலாக சர்க்கரை பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு சர்க்கரை விருப்ப அட்டை ( வெள்ளை நிறம் ) வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு அரிசி தவிர இதர அத்தியாவசியப் பொருட்களுடன் அரிசி*க்கு பதிலாக 3 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்கப்படுகிறது.
எந்த பொருளும் பெற விருப்பமில்லை என்ற குடும்ப அட்டைகள். வெள்ளை நிற குடும்ப அட்டைகள்: பொது விநியோக திட்டத்தின் கீழ் எந்த பொருளும் வாங்க விருப்பம் தெரிவிக்காதவர்களுக்கு, எப்பொருளும் வேண்டா ( வெள்ளை நிறம் ) குடும்ப அட்டை வழங்கப்படுகின்றன.
11, பெயர் நீக்கம் மற்றும் பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்?
ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்ய வேண்டும் என்றால் குடும்ப தலைவர் விண்ணப்ப படிவம் மற்றும் ரேஷன் கார்டு கொடுக்க வேண்டும். குடும்ப தலைவர் மரணம் அடைந்திருந்தால், இறப்பு சான்றுடன் அவரது வாரிசுதாரர் மனு கொடுக்கலாம். பெயர் சேர்க்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட குடும்ப
தலைவர் அதற்கான விண்ணப்பிக்க படிவத்தை அளிக்க வேண்டும்.
1 ,குடும்ப அட்டை பெற விண்ணப்ப படிவம்?
தமிழக அரசு புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பப்படிவத்தினை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்ணயித்துள்ளது . இப்படிவம் http://www.consumer.tn.gov.in/pdf/ration_t.pdf என்ற இணைய தளத்தில் உள்ளது. பயன்படுத்த விரும்புவோர் படிவத்தினை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து எடுத்து பிரதிகளை எடுத்துக் கொள்ளலாம்.
2, விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணைப்பு ஆவணங்கடன் அவர் வசிக்கும் பகுதிக்கு உரிய உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளர் (மண்டல) அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் அவர் வசிக்கும் பகுதி எந்த உதவி ஆணையாளர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது என்பது தொடர்பாக சந்தேகம் எழுந்தால் தொலைபேசி மூலம் இந்த அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
சென்னை தவிர பிற மாவட்டங்களுக்கு விண்ணப்பதாரர் வசிக்கும் பகுதியைச் சார்ந்த உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வட்ட வழங்கல் அலுவலர், உதவி பங்கீட்டு அலுவலர்*, (கோயம்புத்தூர் நகரம் மட்டும்) குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்வார்கள்.
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்புகை சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் தனது விண்ணப்பத்தினை அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். இருந்தபோதிலும் விண்ணப்பம் சென்றடைந்ததை உறுதி செய்துக் கொள்ள ஆதாரமாக ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைப்பது நல்லது.
3, புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு விதிமுறைகள் என்னென்ன?
தனியாக புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையவர் யார்?
1). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் இந்திய குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
2). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தனி சமையலறையுடன் தனியாக வசிக்க வேண்டும்.
3). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
4). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் இந்தியாவில் எங்கும் குடும்ப அட்டை பெற்றிருத்தல் கூடாது.
5). விண்ணப்பதாரரோ மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் பெயர் தமிழ்நாட்டில் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இடம் பெற்றிருக்க கூடாது.
6). விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நெருங்கிய உறவினராக இருத்தல் வேண்டும்.
4, குடும்ப அட்டை மனுவினை பரிசீலிக்க பரிசீலனைக்காக உள்ள நடைமுறைகள் என்ன ?
தங்களால் பூர்த்தி செய்யப்*பட்ட விண்ணப்பம் தல ஆய்வுக்கு அனுப்பப்படும். தல ஆய்வுக்கு செல்லும் அலுவலர் விண்ணப்பதாரரின் வீட்டை தணிக்கை செய்து மனுதாரர் முகவரியில் வசிப்பதையும் தனியாக சமையல் செய்வதையும் மற்றும் எரிவாயு இணைப்பு இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்து உறுதி செய்து கொள்வார்.
மனுதாரரின் வீட்டில் ஆய்வுக்கு வரும் அலுவலரின் அடையாள அட்டையை ( அலுவலக அடையாள அட்டை) அவர் ஆய்வை துவக்குவதற்கு உட்படும் முன் மனுதாரர் கேட்கலாம். உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதன் அலுவலர்களின் நேர்மை மற்றும் அவர்கள் கனிவாக நடந்துக்கொள்வதை உறுதி செய்ய விரும்புகிறது. இத்துறை அலுவலர்கள் மற்றும் ஆய்வு அலுவலரின் முறையற்ற நடத்தை மற்றும் கையூட்டு கேட்பு தொடர்பான புகார்களை மனுதாரர் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாக ஆணையாளர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அவர்களுக்கு தயக்கமின்றி தெரிவிக்கலாம்.
மனுதாரர் பூர்த்தி செய்து உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலகத்தில் கொடுத்த புதிய குடும்ப அட்டை மனு பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தணிக்கைக்கு வருவார்கள். 30 நாட்களுக்குள் தணிக்கை அலுவலர்கள் வரவில்லை என்றால் உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் கேட்கலாம்.
அதன்பிறகு, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்/ உதவி அணையாளர் மேற்கூறப்பட்ட நிபந்தனைகள்படி விண்ணப்பம் தகுதியுடையதாக இருப்பின், விண்ணப்பம் ஒப்புதல் அளிக்கப்பட்டு குடும்ப அட்டை அச்சடிக்க அனுப்பப்படும்.
5. மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா?
கூடுதல் ஆவணங்கள் அளிக்கப்பட வேண்டியது இருந்தால் தவிர, மனுதாரர் 30 நாட்களுக்கு முன்னதாக உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொள்ள தேவையில்லை.
விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் மனுவின் மீதான இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க / மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.
விண்ணப்பம் தகுதியுடையதாக இருந்தால், குடும்ப அட்டை அச்சிட அனுப்பப்படும். அச்சிடப்பட்ட குடும்ப அட்டை உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் பெறப்பட்டவுடன்* அலுவலகத்திலிருந்து ஒப்புகைச்சீட்டுடன் 15 தினங்களுக்குள் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ளுமாறு அஞ்சல் அட்டை மனுதாரருக்கு அனுப்பப்படும்.
ஒரு வேளை, விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்ட காரணத்தை விண்ணப்பித்த நாளிலிருந்து 60 நாட்களுக்குள் மனுதாரருக்கு அஞ்சல் அட்டை மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்ப படிவத்தில் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் குறிப்பிட்டிருந்தால், விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட இறுதி முடிவின் நிலையினை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடமிருந்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
6, விண்ணப்பதாரர் தனது குடும்ப அட்டையினை எவ்விதம் பெற்றுக் கொள்ள வேண்டும் ?
குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலகத்தில் தயாராக உள்ளது என்ற தகவலை விண்ணப்பதாரர் பெறப்பட்டவுடன், 15 தினங்கக்குள் நேரடியாக திங்கள் அல்லது வெள்ளிக் கிழமை அல்லது அஞ்சல் அட்டை, சிக்கன சேமிப்பு தகவல் / மின்அஞ்சல் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பம் சமர்ப்பித்த பொழுது பெறப்பட்ட அசல் ஒப்புகை சீட்டுடன் கொடுத்து குடும்ப அட்டையினை பெற்றுக் கொள்ளலாம்.
ஒருவேளை, அசல் குடும்ப அட்டை தொலைந்து விட்டால் , நகல் அட்டை பெற விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக மனுதாரர் குடும்ப அட்டையின் முதல் பக்கமும் கடைசி பக்கமும் நகல் எடுத்து அல்லது குடும்ப அட்டை எண் ,கடையின் குறியீடு எண் ஆகியவற்றை பாதுகாப்பாக குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வேளை, குடும்ப தலைவர் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள வர இயலவில்லை என்றால் குடும்ப தலைவர் குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் அதிகாரம் அளிப்பு கடிதத்துடன் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள அனுப்பலாம். குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள வரும் உறுப்பினரின் கையொப்பத்தினை மனுதாரர் மேலொப்பம் செய்து அங்கீகாரம் அளிப்பு கடிதம் அளிக்க வேண்டும். இந்த அதிகாரம் வழங்கப்பட்ட நபர் விண்ணப்பம் வழங்கிய பொழுது பெறப்பட்ட அசல் ஒப்புகைச் சீட்டினை சமர்ப்பித்து குடும்ப அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.
உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலர் அங்கிகாரம் செய்யப்பட்ட நபர் சந்தேகப்படும் வகையில் இருப்பின் குடும்ப அட்டை வழங்குவதை மறுக்கலாம்.
புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?
தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெற ரூ.5/- கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்த தொகை சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர் / வட்டவழங்கல் அலுவலகத்தில் செலுத்தப்படும்.
7, ரேஷன் கார்டு விண்ணப்பித்து 60 நாட்களுக்கு மேல் தாமதமானால் மனுதாரர் என்ன செய்யலாம்?
ரேஷன் கார்டு விண்ணப்பித்து 60 நாட்களுக்கு மேல் தாமதமானால் மனுதாரர் என்ன செய்யலாம்?
விண்ணப்பதாரர் உதவி ஆணையாளர் அல்லது வட்ட வழங்கல் அலுவலரை சந்தித்து காலதாமதமான காரணத்தை அறியலாம்.
விண்ணப்பம் வேண்டுமென்றே தாமதம் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர் மற்றும் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை நகரம் அல்லது புறநகர் பகுதிகளில் விண்ணப்பதாரர் துணை ஆணையாளர் (நகரம்)வடக்கு, துணை ஆணையாளர் (நகரம்) தெற்கு அவர்களிடம் பேசலாம்.
மாவட்டங்களில் மனுதாரர் சம்பந்தப்பட்ட மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை அணுகலாம்.
உதவி ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர்கள் உரிய பதில் அளிக்கவில்லை எனில், தேவைப்படின் மனுதாரர் மின் அஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் ஆணையாளர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடம் முறையிடலாம்.
8, ரேஷன் கார்டு விண்ணப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் யாரிடம் முறையீடு செய்வது ?
சென்னை நகர் மற்றம் புற நகர் பொறுத்த வரையில் துணை ஆணையாளர் (நகரம்) வடக்கு மற்றும் துணை ஆணையாளர் (நகரம்) தெற்கு, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அவர்களிடம் மேல் முறையீடு செய்யலாம் .
பிற பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல் முறையீடு செய்யலாம்.
9, ரேஷன் கார்டு விண்ணப்பத்தில் பொய்யான அல்லது தவறான தகவல்களை அளித்தால்?
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு தோராயமாக ஆண்டுக்கு ரூ.2000/- மானிய செலவு ஆகிறது என்பதை விண்ணப்பதாரர் அறிந்து கொள்ள வேண்டும். எனவே குடும்ப உறுப்பினர் பற்றிய தவறான விவரங்கள் மற்றும் தவறான முகவரி அளித்தல் போன்றவை பொது விநியோக திட்ட பொருட்களை கடத்துதலுக்கு வழிகோலும் என்பதுடன் 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பண்ட சட்டம் பிரிவு 7 ன் கீழ் தண்டனைக்குரியதாகும். இத்தகைய விண்ணப்பதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் சட்டப் படி தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் சரியான குடும்ப உறுப்பினரின் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
10, குடும்ப அட்டைகளின் வகைகள்: (விருப்பங்களின் அடிப்படையில் )
அனைத்து அத்தியாவசிய பொருட்கள் .குடும்ப அட்டைகள் ( பச்சை நிற அட்டைகள் ) அரிசி மற்றும் இதர இன்றியமையாப் பொருட்கள் பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு பச்சை நிற குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன.
சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் ( வெள்ளை நிற குடும்ப அட்டைகள்) அரிசிக்கு பதிலாக சர்க்கரை பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு சர்க்கரை விருப்ப அட்டை ( வெள்ளை நிறம் ) வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு அரிசி தவிர இதர அத்தியாவசியப் பொருட்களுடன் அரிசி*க்கு பதிலாக 3 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்கப்படுகிறது.
எந்த பொருளும் பெற விருப்பமில்லை என்ற குடும்ப அட்டைகள். வெள்ளை நிற குடும்ப அட்டைகள்: பொது விநியோக திட்டத்தின் கீழ் எந்த பொருளும் வாங்க விருப்பம் தெரிவிக்காதவர்களுக்கு, எப்பொருளும் வேண்டா ( வெள்ளை நிறம் ) குடும்ப அட்டை வழங்கப்படுகின்றன.
11, பெயர் நீக்கம் மற்றும் பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்?
ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்ய வேண்டும் என்றால் குடும்ப தலைவர் விண்ணப்ப படிவம் மற்றும் ரேஷன் கார்டு கொடுக்க வேண்டும். குடும்ப தலைவர் மரணம் அடைந்திருந்தால், இறப்பு சான்றுடன் அவரது வாரிசுதாரர் மனு கொடுக்கலாம். பெயர் சேர்க்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட குடும்ப
தலைவர் அதற்கான விண்ணப்பிக்க படிவத்தை அளிக்க வேண்டும்.
Tuesday, August 18, 2015
Tuesday, August 11, 2015
சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்…..!!
1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க..
2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும்.
தண்ணீர் :
3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி
மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம்.
4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது.
5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம்
அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ரிப்பேர் ஆவது தடுக்கப்படும்.
6. வெப்பத்தை உணர்ந்து மின் இணைப்பை தானே துண்டித்து விடும் வகையிலான ஏற்பாடுடைய மோட்டார்களைப் பொருத்துவது புத்திசாலித்தனம்.
சிமெண்ட் :
7. தரமான சிமெண்ட்டால்தான் வலுவான கட்டடத்தை உறுதி செய்ய முடியும். அந்தத் தரத்தை சிமெண்டின் நிறத்தைப் பார்த்தே ஓரளவு யூகித்துவிட முடியும். லேசான பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமெண்ட்.
8. மூட்டைக்குள் இருக்கும் சிமெண்ட்டுக்குள் கையை விடும்போது சிலுசிலுவென்று குளுமையாக இருக்க வேண்டும். தண்ணீர் இருக்கும் வாளிக்குள் சிமெண்ட்டைப் போடும்போது அது மிதந்தால் தரத்தில் கோளாறானது என்று அர்த்தம். அதேபோல் தட்டி இருந்தாலும் தரமற்றது.
9. சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை அனுமதிக்கலாம். அதற்கு மேல் போனால், உரிய வகையில் விசாரித்து ஒழுங்கான அளவுள்ள மூட்டைகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குங்கள்.
மணல் :
10. மணலில் அதிக தூசு துரும்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதிக அளவு வண்டல் கலந்திருந்தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்துவிடும்.
11. மணலின் மொத்த எடையில் 8% வண்டல் இருந்தால் பயன்படுத்தலாம். பார்வையாலேயே இதைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மேல் இருந்தால் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
12. கடல் மணலைக் கொடுத்து ஏமாற்றும் வேலைகள் நடக்கின்றன. அந்த மணலைக் கொஞ்சம் வாயில் எடுத்துப் போட, உப்புக் கரித்தால் அது கடல் மணல். இந்த மணலை பயன்படுத்திக் கட்டப்படும் சுவர்கள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். சீக்கிரம் உதிர்ந்துவிடும். மழை பெய்தால் சீக்கிரம் அரித்து விடும். ஆகையால். கடல் மணலுக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிடுங்கள்.
13. மணலில் தவிடு போல் நொறுங்கிப் போகக்கூடிய சிலிக்கா
அதிகம் இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், இது சிமென்ட்டுடனான பிணைப்பை உறுதியாக உருவாக்காது.
இரும்புக் கம்பிகள் :
14. கான்கிரீட்டுக்கு வலு சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எந்த வகை இரும்புகளைப் பயன்படுத்தினாலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
15. ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்றவற்றில் சிறு பிசிறுகள் இருக்கக்கூடும். இவற்றை அகற்றிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.
16. இரும்பின் மேல் கொஞ்சம் கூட துரு இருக்கக் கூடாது. அடையாளங்களுக்காக சிறு அளவில் பெயிண்ட் தடவப்பட்டாலும் நீக்கிவிட வேண்டும். எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு, மண், மணல் போன்ற எந்த வித அசுத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பிணைப்பு வலுவில்லாமல் போய்விடக் கூடும்.
செங்கல் :
17. வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.
18. செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய நாலைந்து செங்கற்களை எடுத்து 24 மணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும். பிறகு, விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் தரம் குறைவான செங்கல் என்று அர்த்தம்.
19. இப்போதெல்லாம் ‘இன்டர்லாக் செங்கல்கள்’ என்றொரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது. நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து தயாரிக்கப்படும் இந்தக் கல் ஒன்றின் விலை 16 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கல், மூன்று செங்கற்களுக்கு இணையானது. வேலையைச் சுலபமாக்கும்.
20. கட்டுமானப் பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும்போதோ, கையாளும்போதோ, பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகிவிடும். நீங்கள் களத்தில் இருந்தால்தான் இந்த சேதாரத்தை கண்காணிக்க முடியும். அலுவலகத்திற்கு விடுமுறை போட்டால் லாஸ் ஆஃப் பே ஆயிற்றே என நீங்கள் கணக்குப் போட்டால் இங்கு அதைவிட அதிக அளவு பொருட்கள் நட்டமாகும்.
21. கான்ட்ராக்டரிடம் வேலையை ஒப்படைக்கும் போது அவரது முந்தைய வேலைகள், அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, அவரது வளைந்து கொடுக்கும் தன்மை, எல்லாவற்றையும் விட நேர்மை ஆகியவற்றை விசாரியுங்கள்.
22. மூலப் பொருட்களை ஒரேயடியாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது தவறு. கட்டுநர்களுக்கு இது சரியானது. ஆனால், முன்கூட்டியே ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பொருட்களை வாங்குவதன் மூலம் நமது பணம் மறைமுகமாக ஒரே இடத்தில் முடக்கப்படுகிறது.
23. அதே சமயம் அவ்வப்போது பொருட்களை வாங்கினால், அன்றன்றைய சந்தை நிலவரம் பொறுத்துதான் நாம் பொருட்களை வாங்க முடியும். இதற்கு என்ன வழி? முன்கூட்டியே, பின் தேதியிட்ட காசோலைகளை டீலர்களிடம் கொடுத்துவிட்டு, அந்தந்த தேதியில்தேவையான பொருட்களை இன்றைய மார்க்கெட் விலைக்கு இறக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.
24. சமீபத்திய தொழிற்நுட்பங்களையும், நவீன கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும் மிச்சமாகும்.
25. செங்கற்களுக்கு மாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். இது விலையும் குறைவு, சேதாரமும் குறைவாகும்.
26. மர வேலைகள் நமது கட்டுமானச் செலவை பெரிதும் கபளீகரம் செய்யக்கூடியவை. எங்கள் வீட்டு வாசற்கதவு மட்டுமே 1 லட்ச ரூபாய் ஆனது என எத்தனை நாள் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?. குறைந்தபட்சம் கிரகப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும்?.
27. எல்லா வேலைகளுக்கும் மரத்தையே நாடாமல், UPVC மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளைப் பயன்படுத்துங்கள். மர லுக்கினைத் தரும் ஸ்டீல் கதவுகளைக் கூட நாம் பயன்படுத்தலாம்.
28. பரண் அமையும் இடத்தில் அதனுடைய தொடர்ச்சியாக சுவற்றின் வெளிப்புறத்தில் சன்க்ஷேடுகளை அமைத்தால் செலவு குறையும்.
29. ஆற்று மணலை வெளியில் ஒரு வார காலம் போட்டு வைத்து, பின்பு அதனை கசடுகள் நீக்கி, சலித்து பயன்படுத்துவதற்கு பதில், நன்றாக பேக் செய்யப்பட்ட M.சேண்டை பூச்சு வேலைக்குப் பயன்படுத்தலாம். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு ஆற்று மணலைவிட M.சேண்ட் விலைகுறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
30. க்ஷட்டரிங் பிளைவுட் கொண்டு சென்ட்ரிங் செய்யும் பட்சத்தில், சீலிங் பூச்சு வேலை முற்றிலும் தவிர்க்கலாம். இதன் மூலம் 1000 சதுர அடி கட்டிடத்தில் ரூ.30,000 வரை மிச்சப்படுத்தலாம்.
31. எந்த வேலைக்கு, எந்த அளவிலான கம்பி என்பதை பொஷூயாளர் மூலமாக பார் பென்டருக்கு உணர்த்திவிடுங்கள். பொதுவாக அஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள் இந்த வேலைகளின் போதுதான் பொறியாளர்களின் பேச்சை பார்பென்டர்கள் கேட்கிறார்கள். ஸ்லாபு போன்ற மற்ற வேலைகளுக்கு அதிக அளவில் கம்பிகள் செலவாவதை நாம் தடுக்க வேண்டும்.
32. முடிந்த அளவு மறுசுழற்சிப் பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். பழைய பொருட்களாயிற்றே என்ற தயக்கத்தை நீங்கள் களைந்தால், கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்யலாம்.
33. உங்களது புராஜெக்டு நடத்தும் இடத்தைச் சுற்றி வலுவான காவலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நிலையில் கட்டுமானப் பொருட்களைவிட காஸ்ட்லியானது எதுவுமில்லை.
34. தேவையற்ற பார்ட்டீசியன் சுவர்களுக்கு அதிக கனமுடைய சுவர்களை அமைக்காதீர்கள்.
35. கட்டுமானப்பணி முடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.
36. செலவானாலும் பரவாயில்லை என்று தரமிக்க மின் கேபிள்கள், மின் சாதனங்களையே வாங்குங்கள். இது ஒன்டைம் இன்வெஸ்ட்மென்ட்தான். இதற்குப் பிறகு ஆகும் மின் செலவை இது பெருமளவு குறைக்கும்.
37. நான் பிராண்டட் பெயிண்ட்களை உங்கள் கட்டுமானத்
திற்குப் பயன்படுத்தாதீர்கள். தரமற்ற பெயிண்ட்கள் உங்கள் பர்ஸை சிக்கனப்படுத்தும். ஆனால், கட்டிடத்தை நீண்டகாலம் பாதுகாக்காது.
38. வீட்டை சுற்றிலும் முறைப்படி அளந்து, எல்லைகளை கவன
மாக வேலியிட்டு பாதுகாத்துக் கொள்வது சிறந்தது.
39. சிமெண்ட் கட்டிட சாமான்கள், கருவிகள் இவற்றை பாதுகாக்க ஒரு சிறிய குடோன் அமைப்பது நல்லது.
40. கட்டுமான பணிக்காக முதலில் குடிநீர் தொட்டி கட்டிக் கொள்வது நல்லது அல்லது செப்டிக் டேங்க் கட்டி, கட்டிட வேலைக்கான நீர் தொட்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
41. போர்வெல் போட்டு, மின் இணைப்பு பெற்ற பிறகு, கட்டிட வேலையை துவங்குவது வரவேற்கத்தக்கதாகும்.
42. அதி நவீன கட்டுமான நுட்பங்கள், பொருட்களை பயன்படுத்திக் கொள்ளுதல், மிக பிரபலமாகி வரும் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுகள் போன்ற அதிநவீன கட்டுமான வசதிகளை பயன்படுத்திக் கொண்டால் கட்டுமான காலம், நேரம் குறையும்.
43. அஸ்திவாரம் போட மண்வெட்டி எடுத்த உடனே மண்ணின் தன்மை தரம் பற்றி பரிசோதித்து இந்த இடத்திற்கு ஏற்ற அஸ்திவார முறையை பொறியாளர் அறிவுரையுடன் முடிவு செய்ய வேண்டும்.
44. பேஸ்மெண்ட் லெவல் கட்டி முடித்த பிறகு சாலையின் உயரத்திற்கும், வீட்டின் உயரத்திற்கும் பொருத்தமான அளவில் கட்டிடத்தை உயர்த்த வேண்டும்.
45. லிண்டல் லெவல் வந்த பிறகு, போர்ட்டிகோ. சிட் அவுட், சன்க்ஷேஷட் பொருட்கள் வைக்க, சுவரின் பக்கவாட்டில் உயரத்தில் லக்கேஜ் லாஃப்ட், சுவற்றிற்குள் வைக்கக்கூடிய ஒயர்களுக்கு இட அமைப்பு பற்றி பொறியாளருடன் ஓர் ஆய்வு செய்ய வேண்டும்.
கீழ்க்கண்ட விவரங்களை தெரிந்து கொள்ளல் அவசியம் :
46. ரூஃப் லெவல் முடிந்த பிறகு எலெக்ட்ரிக் ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் கண்ட்ரோல் பேனலுக்கு இடம் குறித்து ஆய்வு எதிர்காலத்தில் கூடுதலாக மின்வசதி தேவைப்பட்டால் அதற்கான ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் பற்றிய விவரங்கள்.
47. கதவு, நிலவு, ஜன்னல்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மரங்கள் அலுமினிய ஸ்டீல் கிரில்கள், ஃபர்னிச்சர் ஃபிட்டிங்ஸ், பூட்டுகள், கைப்பிடிகள், அலமாரிகள், ரூம் தடுப்புகள், வெண்ட்டிலேட்டர் அமைப்புகள், உள் அலங்கார பொருட்களுக்கான அமைவிடங்கள் பற்றிய அனைத்து விவரங்கள்.
48. தளத்திற்கு மொசைக் மார்பிள்ஸ், செராமிக் டைல்ஸ், சுவரில் பதிக்கும் டைல்ஸ், அலங்காரக் கூரை, ஓடுகள், பளபளக்கும் சமைலயறைப் பலகைகள், ஸ்டோர் ரேக்ஸ் பலகைகள் பற்றிய விவரங்கள்.
49. வண்ணப்பூச்சு உட்புறத்துக்கு ஏற்ற வண்ணம், வெளிச்சுவர்களுக்குரிய வண்ணம் கேட் டிசைனில் இருக்க வேண்டும். என்ன வண்ணம் அடிக்கலாம் என்பதைப் பற்ஷூய விவரங்கள்.
50. உள் அலங்கார அறையின் உள் அலங்கார அமைப்பிலும் அந்த அறையின் தன்மைக்கேற்ப வண்ணமும், உள் அலங்காரமும் இருப்பது பற்றிய விபரங்கள்.
நன்றி : வலைத்தளம்
கள்ள நோட்டை கண்டறிவது எப்படி?
நாம் 500 ரூபாயோ அல்லது 1000 ரூபாயோ வங்கியில் செலுத்தும்போது அது நல்ல நோட்டுதானா என்பதை பலவித கோணங்களில் பார்த்து சோதிப்பார் கேஷியர்.ஆனால் அவர் எப்படி என்னதான் பார்க்கிறார் என்பது எனக்கு புரியாது.வங்கிகளில் நல்ல நோட்டு எப்படி இருக்கும் அதை உறுதி செய்வது எப்படி என்று சில வங்கிகளில் பெரிய அளவில் படமாக வைத்திருக்கிறார்கள்.ஆனால் அவற்றை பொறுமையாக நின்று படிக்க முடிவதில்லை. அதனால் பொறுமையாக அறிந்துகொள்ள ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பணத்தாள் பற்றிய ஒரு சில குறிப்புகளையும், அவற்றில் மறைந்துள்ள நுணுக்களை அறிந்து கொள்ள உதவும் படங்களும் இதோ உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்
ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் ரூபாய் நோட்டுக்களில் உள்ளன. இத்தனை பாதுகாப்பு அம்சங்களையும் தாண்டி எப்படித்தான் கள்ள நோட்டு அடித்துவிடுகிறார்களோ?
1.பாதுகாப்பு இழை: ரூ.10, ரூ.20, ரூ.50 ஆகிய தாள்கள் பார்க்கத்தக்க, ஆனால் முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட பாதுகாப்புச் சாளரம் கொண்ட பாதுகாப்பு இழையைக் கொண்டுள்ளது. ரூ.100, ரூ.500 ஆகிய தாள்கள் பார்க்கத்தக்க சாளரமுள்ள பாதுகாப்பு இழையைக் கொண்டுள்ளது. இந்த இழை பாதி வெளியில் தெரிவதாகவும் பாதி உள்ளே பதிக்கப் பட்டதாகவும் உள்ளது. வெளிச்சத்தில் பிடித்துப் பார்க்கும் போது இந்த இழை தொடர்ச்சியான ஒரு கோடாகத் தெரியும். ரூ.1000 தாள்களைத் தவிர மற்றவற்றில் இந்த இழையில் ‘பாரத்’ என்பது தேவநாகரி எழுத்து வடிவத்திலும் ‘RBI’ என்பதும் மாறி மாறித் தோற்றமளிக்கும். ரூ.1000 பணத்தாளின் பாதுகாப்பு நூலிழையில் ‘பாரத்’ என்பது தேவநாகரி எழுத்து வடிவிலும் ‘1000’, ‘RBI’ என்பனவும் இருக்கும். இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட தாள்கள் எழுத்துகள் எதுவும் இல்லாமல், பார்க்க இயலாத, முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட பாதுகாப்பு இழைகளைக் கொண்டிருந்தன.
2. மறைந்திருக்கும் மதிப்பெண்: மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு வலது பக்கத்திலுள்ள செங்குத்துப் பட்டைக் கோட்டில் அந்தந்த இலக்க மதிப்புக்கு ஏற்றவாறு 20,50,100,500,1000 என்ற எண்கள் மறைந்திருக்கும். உள்ளங்கையில் பிடித்து அதன்மேல் 45° கோணத்தில் வெளிச்சம் விழுமாறு செய்தால் மட்டுமே அந்த மதிப்பினைக் காண முடியும். இல்லையேல் இந்தத் தோற்றம் வெறும் செங்குத்துக் கோடாகவே தெரியும்.
3. நுண்ணிய எழுத்துகள்: மகாத்மா காந்தி உருவப்படத்துக்கும் செங்ககுத்துப்பட்டைக் கோட்டுக்கும் இடையில் இந்த அம்சம் உள்ளது. ரூ.10, ரூ.20 தாள்களில் RBI என்ற எழுத்துக்களும் தாள்களின் இலக்க மதிப்புகளும் உள்ளன. உருப்பெருக்கக் கண்ணாடியின் வழியே இதனைத் தெளிவாகக் காணமுடியும்.
4. அடையாளக்குறியீடு: ரூ.10 தாளைத் தவிர மற்றவற்றில் நீர்க்குறியீட்டுச் சாளரத்துக்கு இடப்புறத்தில் ஒரு செதுக்குருவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தோற்றம் பல்வேறு இயக்க மதிப்புத் தாள்களில் வெவ்வேறு வடிவங்களில் உள்ளது (ரூ.20 இல் செங்குத்து நீள்சதுரம், ரூ.50 இல் சதுரம், ரூ.100இல் முக்கோணம், ரூ.500 இல் வட்டம், ரூ.1000 இல் சாய்சதுரம்) இது பார்வை இல்லாதவர்கள் அத்தாளின் இலக்க மதிப்பினை அடையாளம் காண உதவுகிறது.
5. செதுக்குருவம்: மகாத்மா காந்தி உருவப்படம், ரிசர்வ் வங்கி முத்திரை, உத்தரவாத உறுதிமொழி வாசகம், இடப்பக்கத்தில் அசோகா தூண் சின்னம், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையொப்பம் ஆகியன செதுக்குருவத்தில் அச்சிடப்பட்டுள்ளன. அதாவது தூக்கலான அச்சுகளில் ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.1000 ஆகிய தாள்களில் அச்சிடப்பட்டுள்ளன.
6. ஒளிரும் தன்மை: தாள்களின் எண்ணிடம் ஒளிரும் மையினால் அச்சிடப்பட்டுள்ளது. தாள்களில் ஒளியிழைகளும் உள்ளன. புற ஊதாக் கதிர்விளக்கின் ஒளியில் பார்க்கும்போது இவ்விரண்டையும் காணலாம்.
7. பார்வைக் கோணத்தில் மாறுபடும் மை: ரூ.500 மற்றும் ரூ.1000 பணத்தாள்களில் ரூ.500 மற்றும் ரூ.1000 இன் மேல் (லேசான மஞ்சள், லேசான ஊதா, பழுப்பு ஆகிய மாற்றப்பட்ட வண்ணத் திட்டங்களில்) ஆகியன பார்வைத் தோற்றத்தில் மாறுபடும் அதாவது வண்ணம் மாறித்தோன்றும் மையினால் அச்சிடப்பட்டுள்ளன. இந்தத் தாள்கள் கிடைமட்டமாகப் பிடித்துப் பார்த்தால் இந்த இலக்கங்களின் வண்ணங்கள் பச்சையாகவும் ஒரு கோணத்தில் பிடித்துப் பார்த்தால் நீல நிறமாகவும் தோன்றும்.
ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து படத்தில் உள்ளவற்றை அறிய முடிகிறதா என்று பார்க்கலாம்.இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிட்டாலும் அவை கள்ள நோட்டுத்தான்..
அழுக்கடைந்த/பழுதடைந்த பணத்தாள்களுக்கு உரிய முழு மதிப்புத் தொகையினைப் ஒருவர் பெற முடியும்.
அழுக்கடைந்த/சேதமடைந்த பணத்தாள்கள் எங்கே ஏற்றுக்கொள்ளப் படுகின்றன?எல்லா வங்கிகளுக்கும் தங்கள் கொடுக்கல் வாங்கல் முகப்புகளில் அழுக்கடைந்த தாள்களைப் பெற்றுக்கொண்டு அதற்குரிய மாற்று மதிப்பினைச் செலுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளன. சேதமடைந்த/கிழிந்த நோட்டுகளை பணவறைகள் கொண்ட கிளைகளில் மாற்றிக் கொள்ளலாம்.
பின்வரும் பணத்தாள்கள் திரும்பப்பெறும் விதிகளின்கீழ் மாற்றுத்தொகையைப் பெறுவதற்கு உரியவை அல்ல.
1. முழு பணத்தாளின் பாதிப்பரப்புக் குறைவாக உள்ளவை,.
2. வரிசை எண்ணின் பெரும்பகுதி இல்லாதவை, அதாவது வரிசை எண்ணிற்கு முன்னெழுத்தும் மூன்று எண்களும் அல்லது நான்கு எண்களும் இல்லாத ரூ.5ம் அதற்குட்பட்ட இலக்க மதிப்புள்ள நோட்டுகள், ரூ.10ம் அதற்கு மேலும் உள்ள பணத்தாள்களில் இந்தக் குறைபாடு, வரிசை எண்கள் இருக்கும் இரண்டு இடங்களிலும் இருக்குமானால்,
3. ரிசர்வ் வங்கியின் எந்த அலுவலகத்தினாலாவது அந்தத்தாள் மதிப்பிழக்கச் செய்யப்பட்டிருந்தால் அல்லது முன்னமே தொகை திரும்பச் செலுத்தப்பட்டிருந்தால்.
4. கள்ள நோட்டு என கண்டுபிடிக்கப்பட்டால்.
5. வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டிருந்தால், சேதப்படுத்தப் பட்டிருந்தால், திருத்தப்பட்டிருந்தால்,
6. தேவையற்ற வார்த்தைகளைக் கொண்டிருந்தால், அரசியல் பண்புடைய செய்திகளைத் தரக்கூடிய அல்லது தருகின்ற நோக்கமுடைய வார்த்தைகள்/ படங்கள் கொண்டிருந்தால்.
நாம் 500 ரூபாயோ அல்லது 1000 ரூபாயோ வங்கியில் செலுத்தும்போது அது நல்ல நோட்டுதானா என்பதை பலவித கோணங்களில் பார்த்து சோதிப்பார் கேஷியர்.ஆனால் அவர் எப்படி என்னதான் பார்க்கிறார் என்பது எனக்கு புரியாது.வங்கிகளில் நல்ல நோட்டு எப்படி இருக்கும் அதை உறுதி செய்வது எப்படி என்று சில வங்கிகளில் பெரிய அளவில் படமாக வைத்திருக்கிறார்கள்.ஆனால் அவற்றை பொறுமையாக நின்று படிக்க முடிவதில்லை. அதனால் பொறுமையாக அறிந்துகொள்ள ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பணத்தாள் பற்றிய ஒரு சில குறிப்புகளையும், அவற்றில் மறைந்துள்ள நுணுக்களை அறிந்து கொள்ள உதவும் படங்களும் இதோ உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்
ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் ரூபாய் நோட்டுக்களில் உள்ளன. இத்தனை பாதுகாப்பு அம்சங்களையும் தாண்டி எப்படித்தான் கள்ள நோட்டு அடித்துவிடுகிறார்களோ?
1.பாதுகாப்பு இழை: ரூ.10, ரூ.20, ரூ.50 ஆகிய தாள்கள் பார்க்கத்தக்க, ஆனால் முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட பாதுகாப்புச் சாளரம் கொண்ட பாதுகாப்பு இழையைக் கொண்டுள்ளது. ரூ.100, ரூ.500 ஆகிய தாள்கள் பார்க்கத்தக்க சாளரமுள்ள பாதுகாப்பு இழையைக் கொண்டுள்ளது. இந்த இழை பாதி வெளியில் தெரிவதாகவும் பாதி உள்ளே பதிக்கப் பட்டதாகவும் உள்ளது. வெளிச்சத்தில் பிடித்துப் பார்க்கும் போது இந்த இழை தொடர்ச்சியான ஒரு கோடாகத் தெரியும். ரூ.1000 தாள்களைத் தவிர மற்றவற்றில் இந்த இழையில் ‘பாரத்’ என்பது தேவநாகரி எழுத்து வடிவத்திலும் ‘RBI’ என்பதும் மாறி மாறித் தோற்றமளிக்கும். ரூ.1000 பணத்தாளின் பாதுகாப்பு நூலிழையில் ‘பாரத்’ என்பது தேவநாகரி எழுத்து வடிவிலும் ‘1000’, ‘RBI’ என்பனவும் இருக்கும். இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட தாள்கள் எழுத்துகள் எதுவும் இல்லாமல், பார்க்க இயலாத, முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட பாதுகாப்பு இழைகளைக் கொண்டிருந்தன.
2. மறைந்திருக்கும் மதிப்பெண்: மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு வலது பக்கத்திலுள்ள செங்குத்துப் பட்டைக் கோட்டில் அந்தந்த இலக்க மதிப்புக்கு ஏற்றவாறு 20,50,100,500,1000 என்ற எண்கள் மறைந்திருக்கும். உள்ளங்கையில் பிடித்து அதன்மேல் 45° கோணத்தில் வெளிச்சம் விழுமாறு செய்தால் மட்டுமே அந்த மதிப்பினைக் காண முடியும். இல்லையேல் இந்தத் தோற்றம் வெறும் செங்குத்துக் கோடாகவே தெரியும்.
3. நுண்ணிய எழுத்துகள்: மகாத்மா காந்தி உருவப்படத்துக்கும் செங்ககுத்துப்பட்டைக் கோட்டுக்கும் இடையில் இந்த அம்சம் உள்ளது. ரூ.10, ரூ.20 தாள்களில் RBI என்ற எழுத்துக்களும் தாள்களின் இலக்க மதிப்புகளும் உள்ளன. உருப்பெருக்கக் கண்ணாடியின் வழியே இதனைத் தெளிவாகக் காணமுடியும்.
4. அடையாளக்குறியீடு: ரூ.10 தாளைத் தவிர மற்றவற்றில் நீர்க்குறியீட்டுச் சாளரத்துக்கு இடப்புறத்தில் ஒரு செதுக்குருவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தோற்றம் பல்வேறு இயக்க மதிப்புத் தாள்களில் வெவ்வேறு வடிவங்களில் உள்ளது (ரூ.20 இல் செங்குத்து நீள்சதுரம், ரூ.50 இல் சதுரம், ரூ.100இல் முக்கோணம், ரூ.500 இல் வட்டம், ரூ.1000 இல் சாய்சதுரம்) இது பார்வை இல்லாதவர்கள் அத்தாளின் இலக்க மதிப்பினை அடையாளம் காண உதவுகிறது.
5. செதுக்குருவம்: மகாத்மா காந்தி உருவப்படம், ரிசர்வ் வங்கி முத்திரை, உத்தரவாத உறுதிமொழி வாசகம், இடப்பக்கத்தில் அசோகா தூண் சின்னம், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையொப்பம் ஆகியன செதுக்குருவத்தில் அச்சிடப்பட்டுள்ளன. அதாவது தூக்கலான அச்சுகளில் ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.1000 ஆகிய தாள்களில் அச்சிடப்பட்டுள்ளன.
6. ஒளிரும் தன்மை: தாள்களின் எண்ணிடம் ஒளிரும் மையினால் அச்சிடப்பட்டுள்ளது. தாள்களில் ஒளியிழைகளும் உள்ளன. புற ஊதாக் கதிர்விளக்கின் ஒளியில் பார்க்கும்போது இவ்விரண்டையும் காணலாம்.
7. பார்வைக் கோணத்தில் மாறுபடும் மை: ரூ.500 மற்றும் ரூ.1000 பணத்தாள்களில் ரூ.500 மற்றும் ரூ.1000 இன் மேல் (லேசான மஞ்சள், லேசான ஊதா, பழுப்பு ஆகிய மாற்றப்பட்ட வண்ணத் திட்டங்களில்) ஆகியன பார்வைத் தோற்றத்தில் மாறுபடும் அதாவது வண்ணம் மாறித்தோன்றும் மையினால் அச்சிடப்பட்டுள்ளன. இந்தத் தாள்கள் கிடைமட்டமாகப் பிடித்துப் பார்த்தால் இந்த இலக்கங்களின் வண்ணங்கள் பச்சையாகவும் ஒரு கோணத்தில் பிடித்துப் பார்த்தால் நீல நிறமாகவும் தோன்றும்.
ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து படத்தில் உள்ளவற்றை அறிய முடிகிறதா என்று பார்க்கலாம்.இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிட்டாலும் அவை கள்ள நோட்டுத்தான்..
அழுக்கடைந்த/பழுதடைந்த பணத்தாள்களுக்கு உரிய முழு மதிப்புத் தொகையினைப் ஒருவர் பெற முடியும்.
அழுக்கடைந்த/சேதமடைந்த பணத்தாள்கள் எங்கே ஏற்றுக்கொள்ளப் படுகின்றன?எல்லா வங்கிகளுக்கும் தங்கள் கொடுக்கல் வாங்கல் முகப்புகளில் அழுக்கடைந்த தாள்களைப் பெற்றுக்கொண்டு அதற்குரிய மாற்று மதிப்பினைச் செலுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளன. சேதமடைந்த/கிழிந்த நோட்டுகளை பணவறைகள் கொண்ட கிளைகளில் மாற்றிக் கொள்ளலாம்.
பின்வரும் பணத்தாள்கள் திரும்பப்பெறும் விதிகளின்கீழ் மாற்றுத்தொகையைப் பெறுவதற்கு உரியவை அல்ல.
1. முழு பணத்தாளின் பாதிப்பரப்புக் குறைவாக உள்ளவை,.
2. வரிசை எண்ணின் பெரும்பகுதி இல்லாதவை, அதாவது வரிசை எண்ணிற்கு முன்னெழுத்தும் மூன்று எண்களும் அல்லது நான்கு எண்களும் இல்லாத ரூ.5ம் அதற்குட்பட்ட இலக்க மதிப்புள்ள நோட்டுகள், ரூ.10ம் அதற்கு மேலும் உள்ள பணத்தாள்களில் இந்தக் குறைபாடு, வரிசை எண்கள் இருக்கும் இரண்டு இடங்களிலும் இருக்குமானால்,
3. ரிசர்வ் வங்கியின் எந்த அலுவலகத்தினாலாவது அந்தத்தாள் மதிப்பிழக்கச் செய்யப்பட்டிருந்தால் அல்லது முன்னமே தொகை திரும்பச் செலுத்தப்பட்டிருந்தால்.
4. கள்ள நோட்டு என கண்டுபிடிக்கப்பட்டால்.
5. வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டிருந்தால், சேதப்படுத்தப் பட்டிருந்தால், திருத்தப்பட்டிருந்தால்,
6. தேவையற்ற வார்த்தைகளைக் கொண்டிருந்தால், அரசியல் பண்புடைய செய்திகளைத் தரக்கூடிய அல்லது தருகின்ற நோக்கமுடைய வார்த்தைகள்/ படங்கள் கொண்டிருந்தால்.
வருமான சான்று பெற அலைய வேண்டாம்
சிறுபான்மை மாணவர் கல்வி உதவித்தொகை பெற, வருமானச் சான்றிதழில் பெற்றோரே கையெழுத்திட்டு அளித்தால் போதும் என, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தமிழக அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2, உயர் கல்வியில் ஆராய்ச்சி படிப்பு வரையிலும், தொழில் படிப்பு, தொழில்நுட்பப் படிப்பு படிக்க, சிறுபான்மையின மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கிறிஸ்தவ, இஸ்லாமிய, புத்த, சீக்கிய, பார்சி மற்றும் ஜெயின் வகுப்பினருக்கு, இந்த உதவித்தொகை கிடைக்கும்.உதவித்தொகை பெற, மாணவரின் பெற்றோருக்கு குறிப்பிட்ட வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சான்றிதழை, வருவாய் துறை அதிகாரிகளிடம் பெற்று, பள்ளிகளில் வழங்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு, பெற்றோர் அல்லது பாதுகாவலர், தாங்களே சுய கையொப்பமிட்டு வருமானச் சான்றிதழை அளித்தாலே போதும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, வருமான வரிச் சான்றிதழை, வருவாய் துறையில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என, தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மாணவர் தங்களின் கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியலை, சுய கையெழுத்திட்டு சமர்ப்பித்தாலே போதும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுபான்மை மாணவர் கல்வி உதவித்தொகை பெற, வருமானச் சான்றிதழில் பெற்றோரே கையெழுத்திட்டு அளித்தால் போதும் என, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தமிழக அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2, உயர் கல்வியில் ஆராய்ச்சி படிப்பு வரையிலும், தொழில் படிப்பு, தொழில்நுட்பப் படிப்பு படிக்க, சிறுபான்மையின மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கிறிஸ்தவ, இஸ்லாமிய, புத்த, சீக்கிய, பார்சி மற்றும் ஜெயின் வகுப்பினருக்கு, இந்த உதவித்தொகை கிடைக்கும்.உதவித்தொகை பெற, மாணவரின் பெற்றோருக்கு குறிப்பிட்ட வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சான்றிதழை, வருவாய் துறை அதிகாரிகளிடம் பெற்று, பள்ளிகளில் வழங்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு, பெற்றோர் அல்லது பாதுகாவலர், தாங்களே சுய கையொப்பமிட்டு வருமானச் சான்றிதழை அளித்தாலே போதும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, வருமான வரிச் சான்றிதழை, வருவாய் துறையில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என, தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மாணவர் தங்களின் கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியலை, சுய கையெழுத்திட்டு சமர்ப்பித்தாலே போதும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கார் விபத்துக்குள்ளானால் என்ன செய்ய வேண்டும்?
> கார் விபத்துக்குள்ளானதும் இன்ஜின் இயங்கிக் கொண்டிருந்தால் முதலில் காரை ஆஃப் செய்ய வேண்டும். பின்பு ஹாண்ட் பிரேக் போட வேண்டும்.
> பின்பு Hazard எனப்படும் எச்சரிக்கை விளக்கைப் போட்டுவிட்டு டிக்கியில் இருக்கும் முக்கோண ரிஃப்ளெக்டரை வாகனத்தின் பின்புறத்திலிருந்து 10 மீட்டர் இடைவெளியில் வைக்க வேண்டும். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் எச்சரிக்கையாக வருவதற்கு வசதியாக இருக்கும்.
> காரை இன்ஷுரன்ஸ் செய்துள்ள நிறுவனத்துக்கு போன் மூலம் தெரியப் படுத்தவேண்டும்.
> இன்ஷுரன்ஸ் நிறுவனம் விபத்துக் குள்ளான இடத்துக்கு அருகாமையில் இருக்கும் பணிமனையின் முகவரியை தெரியப்படுத்துவார்கள். அந்த முகவரியில் உள்ள பணிமனையிலோ அல்லது தாங்கள் வழக்கமாக காரை சர்வீசுக்கு விடும் பணிமனையிலோ காரை விட்டு விடலாம்.
> பணிமனையில் கிளெய்ம் விண்ணப்பத்தில் விபத்து நடந்த விவரத்தை பூர்த்தி செய்து கையொப்பமிட வேண்டும்.
> பணிமனையில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட இன்ஷுரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரிவிப்பார்கள். இன்ஷுரன்ஸ் நிறுவனத்திலிருந்து 24 மணி நேரத்துக்குள் மதிப்பீட்டாளர் (சர்வேயர்) வந்து காரை பார்வையிடுவார்.
> சர்வேயர் பார்வையிடும்போது காரின் ஒரிஜனல் ஆர்சி, இன்ஷுரன்ஸ் பாலிசி, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். அவர் பரிசோதித்துவிட்டு திரும்ப தந்து விடுவார். ஒருவேளை விபத்து நடந்த இடத்தில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பின் அது தொடர்பாக காவல்துறையின் எப்ஐஆர் படிவத்தின் நகலை தாக்கல் செய்ய வேண்டும்.
> காரை பழுது நீக்க ஆகும் செலவு தொடர்பான உத்தேச செலவுத் தொகை குறித்த பட்டியலை பணிமனையைச் சேர்ந்தவர்கள் இன்ஷுரன்ஸ் சர்வேயரிடம் அளிப்பர். அதையும் வாகனத் தையும் சர்வேயர் ஒப்பிட்டுப் பார்ப்பார்.
> பணிமனை அளித்த செலவு விவரம் மற்றும் வாகனத்தில் ஏற்பட்டுள்ள பழுது விவரம் பொருந்தும்பட்சத்தில் காரின் பாகங்களை புதுப்பிக்க சர்வேயர் ஒப்புதல் அளிப்பார்.
> பணிமனையில் காரை சரி செய்த பின்பு மீண்டும் சர்வேயருக்கு விவரம் தெரிவிக்கப்படும். அவர் பணிமனையில் காரை பார்த்து புதுப்பிக்கப்பட்ட பாகங்களை புகைப்படம் எடுப்பார். பிறகு வாகனத்தை சரி செய்த தொகைக்கான பில் அவரிடம் அளிக்கப்படும்.
> சர்வேயர் அந்த பில்லை சரிபார்த்து லையபிலிட்டி எனும் இன்ஷுரன்ஸ் செட்டில்மென்ட் ஆவணத்தைத் தயார் செய்து சம்பந்தப்பட்ட பணிமனைக்கு அனுப்பி வைப்பார்.
> பணிமனையில் இன்ஸூ ரன்ஸ் நிறுவனம் அனுமதித்த இழப் பீட்டுத் தொகை மற்றும் காரின் உரிமையாளர் செலுத்த வேண்டிய தொகை குறித்த விவரம் தெரிவிக்கப்படும்.
> கார் உரிமையாளர் கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருப்பின் அதை செலுத்தி காரை எடுத்துச் செல்லலாம்.
> கார் விபத்துக்குள்ளானதும் இன்ஜின் இயங்கிக் கொண்டிருந்தால் முதலில் காரை ஆஃப் செய்ய வேண்டும். பின்பு ஹாண்ட் பிரேக் போட வேண்டும்.
> பின்பு Hazard எனப்படும் எச்சரிக்கை விளக்கைப் போட்டுவிட்டு டிக்கியில் இருக்கும் முக்கோண ரிஃப்ளெக்டரை வாகனத்தின் பின்புறத்திலிருந்து 10 மீட்டர் இடைவெளியில் வைக்க வேண்டும். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் எச்சரிக்கையாக வருவதற்கு வசதியாக இருக்கும்.
> காரை இன்ஷுரன்ஸ் செய்துள்ள நிறுவனத்துக்கு போன் மூலம் தெரியப் படுத்தவேண்டும்.
> இன்ஷுரன்ஸ் நிறுவனம் விபத்துக் குள்ளான இடத்துக்கு அருகாமையில் இருக்கும் பணிமனையின் முகவரியை தெரியப்படுத்துவார்கள். அந்த முகவரியில் உள்ள பணிமனையிலோ அல்லது தாங்கள் வழக்கமாக காரை சர்வீசுக்கு விடும் பணிமனையிலோ காரை விட்டு விடலாம்.
> பணிமனையில் கிளெய்ம் விண்ணப்பத்தில் விபத்து நடந்த விவரத்தை பூர்த்தி செய்து கையொப்பமிட வேண்டும்.
> பணிமனையில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட இன்ஷுரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரிவிப்பார்கள். இன்ஷுரன்ஸ் நிறுவனத்திலிருந்து 24 மணி நேரத்துக்குள் மதிப்பீட்டாளர் (சர்வேயர்) வந்து காரை பார்வையிடுவார்.
> சர்வேயர் பார்வையிடும்போது காரின் ஒரிஜனல் ஆர்சி, இன்ஷுரன்ஸ் பாலிசி, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். அவர் பரிசோதித்துவிட்டு திரும்ப தந்து விடுவார். ஒருவேளை விபத்து நடந்த இடத்தில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பின் அது தொடர்பாக காவல்துறையின் எப்ஐஆர் படிவத்தின் நகலை தாக்கல் செய்ய வேண்டும்.
> காரை பழுது நீக்க ஆகும் செலவு தொடர்பான உத்தேச செலவுத் தொகை குறித்த பட்டியலை பணிமனையைச் சேர்ந்தவர்கள் இன்ஷுரன்ஸ் சர்வேயரிடம் அளிப்பர். அதையும் வாகனத் தையும் சர்வேயர் ஒப்பிட்டுப் பார்ப்பார்.
> பணிமனை அளித்த செலவு விவரம் மற்றும் வாகனத்தில் ஏற்பட்டுள்ள பழுது விவரம் பொருந்தும்பட்சத்தில் காரின் பாகங்களை புதுப்பிக்க சர்வேயர் ஒப்புதல் அளிப்பார்.
> பணிமனையில் காரை சரி செய்த பின்பு மீண்டும் சர்வேயருக்கு விவரம் தெரிவிக்கப்படும். அவர் பணிமனையில் காரை பார்த்து புதுப்பிக்கப்பட்ட பாகங்களை புகைப்படம் எடுப்பார். பிறகு வாகனத்தை சரி செய்த தொகைக்கான பில் அவரிடம் அளிக்கப்படும்.
> சர்வேயர் அந்த பில்லை சரிபார்த்து லையபிலிட்டி எனும் இன்ஷுரன்ஸ் செட்டில்மென்ட் ஆவணத்தைத் தயார் செய்து சம்பந்தப்பட்ட பணிமனைக்கு அனுப்பி வைப்பார்.
> பணிமனையில் இன்ஸூ ரன்ஸ் நிறுவனம் அனுமதித்த இழப் பீட்டுத் தொகை மற்றும் காரின் உரிமையாளர் செலுத்த வேண்டிய தொகை குறித்த விவரம் தெரிவிக்கப்படும்.
> கார் உரிமையாளர் கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருப்பின் அதை செலுத்தி காரை எடுத்துச் செல்லலாம்.
Monday, August 3, 2015
உங்கள் பணம் உங்கள் கையில்
நகர்மயமும், தொழில்நுட்பமும் வளர வளர மக்களின் நுகர்வுத் தன்மையும் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. இந்த மாற்றம் தவிர்க்க முடியாது. அதுதான் காலத்தின் விதி. இந்த காலமாற்றம் தரும் சுதந்திரத்தை நாம் சரியாக புரிந்து கொண்டிருக்கிறோமா என்பது நம்மில் பலருக்கு புரியாத புதிராகத்தான் உள்ளது.
பொருளாதார வளர்ச்சி அடைய அடைய, புதிய பணக்காரர்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளனர் என்கிறது புள்ளிவிவரங்கள். இதற்கேற்ப ஐடி துறையின் வளர்ச்சி இளைய சமுதாயத்துக்கு போதிய வருமானத்தைக் கொண்டு வந்திருக்கிறது. தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி அலைச்சல் மிகுந்த பல வேலைகளை இருந்த இடத்தில் இருந்தே செய்து கொள்வதற்குத் துணை புரிந்துள்ளது. இந்த கால மாற்றத்தை உள்வாங்கிக் கொண்டு தடுமாறிக் கொண்டிருக்கிறது நமது நுகர்வு தன்மை. ஆம் ஒரு பொருள் தேவையாக இருக்குமா? இருக்காதா? என்று முடிவெடுப்பதற்குள் அதற்கு பில் போட்டு பணம் கட்டி விடுகிறோம்... அவ்வளவு வேகம் நமது நுகர்வு கலாச்சாரத்தில்.
ஒவ்வொரு வீட்டிலும் இப்படி வாங்கிக் குவித்து பயன்படுத்தாத பொருட்களை பட்டியலிடுங்களேன்... சுமார் 50 சதவீதம் பொருட்களை இப்படி கண்டுபிடிக்கலாம். அதாவது நமது நுகர்வு தன்மை மாறிக் கொண்டிருக்கிறது... நமது தேவையை நாம் தீர்மானிப்பது என்கிற எல்லையை தாண்டி இப்போது நிறுவனங்களே தீர்மானிக்கின்றன என்கிற இடத்தில் இருக்கிறோம்...
ஏன் என்னதான் ஆச்சு நமது மக்களுக்கு...
தேவையை திட்டமிடுவதில்லை
நமது தேவை என்ன என்பதை திட்டமிடாமல் வாங்கிக் குவிப்பதுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இது நமது பணத்துக்கு பங்கம் வைப்பது மாத்திரமல்ல, இந்த பழக்கம் நம்மை கடனாளியாக்குகிறது என்கிறது ஆய்வுகள். அடுத்த வீட்டில் இருப்ப வருக்கு தையல் தெரியும், அதனால் ஒரு தையல் இயந்திரம் வாங்குகிறார் என்றால், அதை பார்த்து நமக்கு ஆசை வருகிறது. அவருக்கு அதன் தேவை இருந்தது, ஆனால் நமக்கு தேவை இல்லாமலேயே ஒரு இயந்திரத்தை வாங்கி வைக்கிறோமே ஏன்? நகரத்தில் வசிக்கும் பலரது வீடுகளில் இருக்கும் மைக்ரோவேவ் ஓவன் அப்படித்தானே இருக்கிறது. பல வீடுகளில் அது குட்டி பீரோவாகத்தான் பயன்படுகிறதே தவிர சமைப்பதற்கு அல்ல.
டெலி ஷாப்பிங்
காலையில் தொலைக்காட்சியை ஆன் செய்ததும் வருகிற முதல் நிகழ்ச்சி டெலி மார்க்கெட்டிங்தான். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாகவே பொருட்களை விற்கிறோம் என்று டேபிள்மேட் முதல் கூந்தல் தைலம் வரை விற்கிறார்கள்.
மால்கள்
மால்களுக்குச் சென்று வருவதை ஸ்டேட்டஸ் சிம்பளாக பார்க்கிறது நகரத்துக்கு குடும்பம். முன்பெல்லாம் பொழுதுபோக்க பார்க், பீச் சென்றவர்கள் சும்மா சேஞ்சுக்காக மால் செல்வதாக சொல்கின்றனர். ஆனால் மால்கள் கொடுக்கும் சுதந்திரம் நமது பர்சை காலி செய்கிறதுதானே... பசியில் இருக்கும் போது ஷாப்பிங்குக்கு செல்ல வேண்டாம் என்கிறது உளவியல். பசியின்போது சென்றால் பார்க்கும் தின்பண்டங்களை எல்லாம் வாங்கிச் சாப்பிடுவதுபோல மனசும் அலைபாயுமாம். எனவே மால் களுக்குச் செல்லும்போது இவ்வளவு பணம்தான் செலவழிக்க வேண்டும் என்று திட்டமிட்டுச் செல்லுங்கள்.
இணையதள சலுகைகள்
ஆன்லைன் வர்த்தக நிறுவனங் களுக்கு கடைகளோ கட்டுப்பாடுகளோ கிடையாது அதனால் சலுகைகளை அள்ளிக் கொடுக்கின்றன என்கிற நினைப்பு பலருக்கு இருக்கிறது. அது உண்மையல்ல, இப்போது நஷ்டமே அடைந்தாலும், தங்கள் வலைத் தளத்துக்கு அதிக நுகர்வோரை வரவழைப்பதுதான் அவர்கள் இலக்கு.
50,000 ரூபாய் மதிப்புள்ள பொருளை 5,000 ரூபாய்க்கு வாங்கலாம் என ஒரு விளம்பரம். அதை நம்பி அந்தப் பொருளை வாங்க அந்த தளத்துக்குச் சென்றால் நமது அனைத்து விவரங்களையும் கேட்கிறார்கள். சரி ஆபருக்கான விவரம்தானே என்று கொடுத்த பிறகு, யாராவது ஒருவருக்குத்தான் ஆபர் என்று முடித்து விட்டனர். ஆனால் அடுத்த அடுத்த முறை வேறு ஒரு இணைய தளத்துக்குச் சென்றால்கூட அங்கு வந்து அழைக்காத குறையாக அது வேண்டுமா இது வேண்டுமா என அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது.
எக்ஸ்சேஞ்ச் ஆபர்
8 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட போன் தற்போது உள்ளது. ஆறுமாதம்கூட ஆகவில்லை, கிட்டத்தட்ட அதே தரத்தில் அதே விலையில் 13 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா போன் வந்துவிட்டது. கூடவே பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்துவிடலாம் என்கிற ஆசையும் வந்து விடுகிறது. புகைப்படம் எடுப்பதற்கு கேமரா வாங்க வேண்டும் என்கிற ஆசை ஒருவருக்கு இருந்தது. இதற்காக ஒரு பெரும் தொகை செலவழித்து கேமரா வாங்கினார்.
ஆனால், 13 மெகா பிக்ஸல் மொபைல் வாங்கியபிறகு கேமராவை ஓரம் கட்டிவிட்டார். இதேபோல நன்றாக இருக்கும் பிரிட்ஜை, புதிய மாடலுக்கு மாற்றுகிறேன் என்று மாற்றிய அனுபவம் பலருக்கு இருக்கதான் செய்கிறது.
நேர நிபந்தனைகள்
பொருட்களை பார்த்து, தெரிந்து, அனுபவம் கேட்டறிந்து வாங்கும் பழக்கம்போய் இப்போது முன்கூட்டியே பதிவு செய்து வாங்குவதும் நடக்கிறது.
இந்த ஏமாற்று வித்தையில் வேடிக் கையான விஷயம், பொருளை வாங்கு வதற்கான சுவாரஸ்யத்தைக் கூட்டவும், வேகமாக விற்பனை செய்து முடிக்கவும், சில நிமிடங்களே உள்ளன என டைமர் முறையில் விரட்டுகின்றன சில ஆன்லைன் நிறுவனங்கள். ஒரு சீன செல்போன் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தோடு கூட்டு வைத்து முன்பதிவு செய்தது. பதிவு செய்வதற்கே ஆன்லைனில் கூட்டம் அலைமோதியது. செல்போனை பயன்படுத்திய பிறகுதான் அதன் பாதகங்கள் தெரிந்தது. தற்போது அந்த மாடல் பெயிலியர் என தெரிந்து யாரும் சீந்துவதிலை.
நுகர்வோர்களை நிறுவனங்கள் கவர்ச்சி காட்டி இழுப்பதும், நுகர்வோரே தானே சென்று வலையில் விழுவதும் நடக்கிறதுதான். அதற்காக நாம் நுகர்வு என்கிற விஷயத்தை புறக்கணித்துவிட முடியுமா.. அல்லது நவீன வசதிகளை பயன்படுத்தாமல் இருக்கத்தான் முடியுமா... என்ற சந்தேகம் எழலாம்.
உண்மையில் அப்டேட்டாக இருப்பது நல்லதுதான். ஆனால் 13 மெகா பிக்ஸல் கேமரா செல்போன் வாங்கிய பிறகு, கேமரா தனியாக தேவையில்லை. அதேபோல் வீட்டில் ஏற்கெனவே படிக்கிற வசதி கொண்ட டேபிள் இருக்கும்போது, டேபிள்மேட் தேவையில்லை. நன்றாக வேலை செய்யும் பிரிட்ஜ் இருக்கும்போது புதுசு தேவையில்லை. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அதாவது நமது பயன்பாட்டுக்கு ஏற்ற பொருட்கள் ஏற்கெனவே இருக்கும்போது அப்டேட் என்பது செலவுக்கான விஷயமே என்கின்றனர் அனுபவசாலிகள்.
இப்போது ஒரு பட்டியலிடுங்கள்... இந்த அப்டேட் சமாச்சாரங்களுக்காக நீங்கள் செலவழித்த தொகையை கணக்கிடுங்கள். இதை திரும்ப விற்பனை செய்தால் தற்போது எவ்வளவு கிடைக்கும் என்பதையும் கணக்கிடுங்கள். நீங்கள் செலவு செய்ததில் 50 சதவீதம்கூட உங்களுக்கு திரும்பி வராது. பொருளின் நுகர்வுக்கு முன் ஒரு நிமிடம் யோசியுங்கள். இது அவசியமா என கேட்டுக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மட்டும் வாங்குங்கள். ஏனென்றால் உங்கள் பர்ஸ் உங்கள் கைகளில்தான் இருக்க வேண்டும். நிறுவனங்கள் உங்களுக்குத் தெரிந்தே பணத்தை எடுப்பதை அனுமதிக்கக் கூடாது.!
நகர்மயமும், தொழில்நுட்பமும் வளர வளர மக்களின் நுகர்வுத் தன்மையும் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. இந்த மாற்றம் தவிர்க்க முடியாது. அதுதான் காலத்தின் விதி. இந்த காலமாற்றம் தரும் சுதந்திரத்தை நாம் சரியாக புரிந்து கொண்டிருக்கிறோமா என்பது நம்மில் பலருக்கு புரியாத புதிராகத்தான் உள்ளது.
பொருளாதார வளர்ச்சி அடைய அடைய, புதிய பணக்காரர்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளனர் என்கிறது புள்ளிவிவரங்கள். இதற்கேற்ப ஐடி துறையின் வளர்ச்சி இளைய சமுதாயத்துக்கு போதிய வருமானத்தைக் கொண்டு வந்திருக்கிறது. தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி அலைச்சல் மிகுந்த பல வேலைகளை இருந்த இடத்தில் இருந்தே செய்து கொள்வதற்குத் துணை புரிந்துள்ளது. இந்த கால மாற்றத்தை உள்வாங்கிக் கொண்டு தடுமாறிக் கொண்டிருக்கிறது நமது நுகர்வு தன்மை. ஆம் ஒரு பொருள் தேவையாக இருக்குமா? இருக்காதா? என்று முடிவெடுப்பதற்குள் அதற்கு பில் போட்டு பணம் கட்டி விடுகிறோம்... அவ்வளவு வேகம் நமது நுகர்வு கலாச்சாரத்தில்.
ஒவ்வொரு வீட்டிலும் இப்படி வாங்கிக் குவித்து பயன்படுத்தாத பொருட்களை பட்டியலிடுங்களேன்... சுமார் 50 சதவீதம் பொருட்களை இப்படி கண்டுபிடிக்கலாம். அதாவது நமது நுகர்வு தன்மை மாறிக் கொண்டிருக்கிறது... நமது தேவையை நாம் தீர்மானிப்பது என்கிற எல்லையை தாண்டி இப்போது நிறுவனங்களே தீர்மானிக்கின்றன என்கிற இடத்தில் இருக்கிறோம்...
ஏன் என்னதான் ஆச்சு நமது மக்களுக்கு...
தேவையை திட்டமிடுவதில்லை
நமது தேவை என்ன என்பதை திட்டமிடாமல் வாங்கிக் குவிப்பதுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இது நமது பணத்துக்கு பங்கம் வைப்பது மாத்திரமல்ல, இந்த பழக்கம் நம்மை கடனாளியாக்குகிறது என்கிறது ஆய்வுகள். அடுத்த வீட்டில் இருப்ப வருக்கு தையல் தெரியும், அதனால் ஒரு தையல் இயந்திரம் வாங்குகிறார் என்றால், அதை பார்த்து நமக்கு ஆசை வருகிறது. அவருக்கு அதன் தேவை இருந்தது, ஆனால் நமக்கு தேவை இல்லாமலேயே ஒரு இயந்திரத்தை வாங்கி வைக்கிறோமே ஏன்? நகரத்தில் வசிக்கும் பலரது வீடுகளில் இருக்கும் மைக்ரோவேவ் ஓவன் அப்படித்தானே இருக்கிறது. பல வீடுகளில் அது குட்டி பீரோவாகத்தான் பயன்படுகிறதே தவிர சமைப்பதற்கு அல்ல.
டெலி ஷாப்பிங்
காலையில் தொலைக்காட்சியை ஆன் செய்ததும் வருகிற முதல் நிகழ்ச்சி டெலி மார்க்கெட்டிங்தான். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாகவே பொருட்களை விற்கிறோம் என்று டேபிள்மேட் முதல் கூந்தல் தைலம் வரை விற்கிறார்கள்.
மால்கள்
மால்களுக்குச் சென்று வருவதை ஸ்டேட்டஸ் சிம்பளாக பார்க்கிறது நகரத்துக்கு குடும்பம். முன்பெல்லாம் பொழுதுபோக்க பார்க், பீச் சென்றவர்கள் சும்மா சேஞ்சுக்காக மால் செல்வதாக சொல்கின்றனர். ஆனால் மால்கள் கொடுக்கும் சுதந்திரம் நமது பர்சை காலி செய்கிறதுதானே... பசியில் இருக்கும் போது ஷாப்பிங்குக்கு செல்ல வேண்டாம் என்கிறது உளவியல். பசியின்போது சென்றால் பார்க்கும் தின்பண்டங்களை எல்லாம் வாங்கிச் சாப்பிடுவதுபோல மனசும் அலைபாயுமாம். எனவே மால் களுக்குச் செல்லும்போது இவ்வளவு பணம்தான் செலவழிக்க வேண்டும் என்று திட்டமிட்டுச் செல்லுங்கள்.
இணையதள சலுகைகள்
ஆன்லைன் வர்த்தக நிறுவனங் களுக்கு கடைகளோ கட்டுப்பாடுகளோ கிடையாது அதனால் சலுகைகளை அள்ளிக் கொடுக்கின்றன என்கிற நினைப்பு பலருக்கு இருக்கிறது. அது உண்மையல்ல, இப்போது நஷ்டமே அடைந்தாலும், தங்கள் வலைத் தளத்துக்கு அதிக நுகர்வோரை வரவழைப்பதுதான் அவர்கள் இலக்கு.
50,000 ரூபாய் மதிப்புள்ள பொருளை 5,000 ரூபாய்க்கு வாங்கலாம் என ஒரு விளம்பரம். அதை நம்பி அந்தப் பொருளை வாங்க அந்த தளத்துக்குச் சென்றால் நமது அனைத்து விவரங்களையும் கேட்கிறார்கள். சரி ஆபருக்கான விவரம்தானே என்று கொடுத்த பிறகு, யாராவது ஒருவருக்குத்தான் ஆபர் என்று முடித்து விட்டனர். ஆனால் அடுத்த அடுத்த முறை வேறு ஒரு இணைய தளத்துக்குச் சென்றால்கூட அங்கு வந்து அழைக்காத குறையாக அது வேண்டுமா இது வேண்டுமா என அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது.
எக்ஸ்சேஞ்ச் ஆபர்
8 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட போன் தற்போது உள்ளது. ஆறுமாதம்கூட ஆகவில்லை, கிட்டத்தட்ட அதே தரத்தில் அதே விலையில் 13 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா போன் வந்துவிட்டது. கூடவே பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்துவிடலாம் என்கிற ஆசையும் வந்து விடுகிறது. புகைப்படம் எடுப்பதற்கு கேமரா வாங்க வேண்டும் என்கிற ஆசை ஒருவருக்கு இருந்தது. இதற்காக ஒரு பெரும் தொகை செலவழித்து கேமரா வாங்கினார்.
ஆனால், 13 மெகா பிக்ஸல் மொபைல் வாங்கியபிறகு கேமராவை ஓரம் கட்டிவிட்டார். இதேபோல நன்றாக இருக்கும் பிரிட்ஜை, புதிய மாடலுக்கு மாற்றுகிறேன் என்று மாற்றிய அனுபவம் பலருக்கு இருக்கதான் செய்கிறது.
நேர நிபந்தனைகள்
பொருட்களை பார்த்து, தெரிந்து, அனுபவம் கேட்டறிந்து வாங்கும் பழக்கம்போய் இப்போது முன்கூட்டியே பதிவு செய்து வாங்குவதும் நடக்கிறது.
இந்த ஏமாற்று வித்தையில் வேடிக் கையான விஷயம், பொருளை வாங்கு வதற்கான சுவாரஸ்யத்தைக் கூட்டவும், வேகமாக விற்பனை செய்து முடிக்கவும், சில நிமிடங்களே உள்ளன என டைமர் முறையில் விரட்டுகின்றன சில ஆன்லைன் நிறுவனங்கள். ஒரு சீன செல்போன் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தோடு கூட்டு வைத்து முன்பதிவு செய்தது. பதிவு செய்வதற்கே ஆன்லைனில் கூட்டம் அலைமோதியது. செல்போனை பயன்படுத்திய பிறகுதான் அதன் பாதகங்கள் தெரிந்தது. தற்போது அந்த மாடல் பெயிலியர் என தெரிந்து யாரும் சீந்துவதிலை.
நுகர்வோர்களை நிறுவனங்கள் கவர்ச்சி காட்டி இழுப்பதும், நுகர்வோரே தானே சென்று வலையில் விழுவதும் நடக்கிறதுதான். அதற்காக நாம் நுகர்வு என்கிற விஷயத்தை புறக்கணித்துவிட முடியுமா.. அல்லது நவீன வசதிகளை பயன்படுத்தாமல் இருக்கத்தான் முடியுமா... என்ற சந்தேகம் எழலாம்.
உண்மையில் அப்டேட்டாக இருப்பது நல்லதுதான். ஆனால் 13 மெகா பிக்ஸல் கேமரா செல்போன் வாங்கிய பிறகு, கேமரா தனியாக தேவையில்லை. அதேபோல் வீட்டில் ஏற்கெனவே படிக்கிற வசதி கொண்ட டேபிள் இருக்கும்போது, டேபிள்மேட் தேவையில்லை. நன்றாக வேலை செய்யும் பிரிட்ஜ் இருக்கும்போது புதுசு தேவையில்லை. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அதாவது நமது பயன்பாட்டுக்கு ஏற்ற பொருட்கள் ஏற்கெனவே இருக்கும்போது அப்டேட் என்பது செலவுக்கான விஷயமே என்கின்றனர் அனுபவசாலிகள்.
இப்போது ஒரு பட்டியலிடுங்கள்... இந்த அப்டேட் சமாச்சாரங்களுக்காக நீங்கள் செலவழித்த தொகையை கணக்கிடுங்கள். இதை திரும்ப விற்பனை செய்தால் தற்போது எவ்வளவு கிடைக்கும் என்பதையும் கணக்கிடுங்கள். நீங்கள் செலவு செய்ததில் 50 சதவீதம்கூட உங்களுக்கு திரும்பி வராது. பொருளின் நுகர்வுக்கு முன் ஒரு நிமிடம் யோசியுங்கள். இது அவசியமா என கேட்டுக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மட்டும் வாங்குங்கள். ஏனென்றால் உங்கள் பர்ஸ் உங்கள் கைகளில்தான் இருக்க வேண்டும். நிறுவனங்கள் உங்களுக்குத் தெரிந்தே பணத்தை எடுப்பதை அனுமதிக்கக் கூடாது.!
இரத்த தானம் செய்ய தேவையான தகுதிகள்
இரத்ததானம் பற்றிய சிறு விளக்கம்,
"இரத்தம தானம் செய்ய தேவையான தகுதிகள் ",
🔺18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் பெண்கள் அனைவரும் இரத்தம் தானம் செய்யலாம் .
🔺நமது எடை 50கிலோவிற்கு குறையாது இருத்தல் வேண்டும்.
🔺 உடலின் ஹீமோகுளோபின் அளவு 12.5. கிராம் இருத்தல் வேண்டும் .
🔺 இரத்த அழுத்தம் இயல்பு நிலையில் இருக்கவேண்டும் .(100-140 மேல் அளவு ,60-90 கீழ் அளவு )
🔺 மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்தம் தானம் செய்யலாம் .
"இரத்த தானத்தை தவிர்க்க வேண்டியவர்கள் "
🔺24 மணி நேரத்திற்கு முன் மது அருந்தி இருத்தல் கூடாது .
🔺பெரிய அறுவை சிகிச்சை செய்த 6 மாதத்திற்குள்ளோ,
சிறிய அறுவை சிகிச்சை செய்த 3மாதத்திற்குள்ளோ இரத்த தானம் செய்யக்கூடாது .
🔺 மலேரியா ,டைஃபாய்டு சிகிச்சை எடுத்த 3 மாதத்தில் இரத்த தானம் செய்யக்கூடாது
🔺மஞ்சள்காமாலை சிகிச்சை எடுத்த 6 மாதத்திற்கு இரத்த தானம் செய்யக்கூடாது .
🔺ஆறு மாதத்திற்குள் பச்சை குத்துதல் ,பல் பிடுங்கி இருத்தல் கூடாது.
🔺பெண்கள் கருவுற்று இருக்கும் காலத்திலும் ,குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும், மாதவிடாய் காலங்களிலும் இரத்த தானம் செய்தல் கூடாது.
பொது குறிப்புகள்
🔺நம் ஒவ்வொருவர் உடலிலும் தோராயமாக 5 லிட்டர் இரத்தம் இருக்கும்.
🔺இரத்தம் தானம் செய்யும்போது உடலில் இருந்து எடுப்பது 350 மில்லி லிட்டர் மட்டுமே.
🔺நாம் தானம் செய்த 350 மி.லி இரத்தம் அடுத்த 24 மணி நேரத்தில் புதிதாக நமது உடலில் மீண்டும் உற்பத்தி ஆகிவிடும் .
🔺இரத்தம் தானம் செய்ய 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
🔺இரத்தம் தானம் செய்த உடன் வழக்கம்போல் அன்றாட வேலைகள் செய்யலாம்.
இவற்றை நாம் மனதில் வைத்து உதவி செய்வோம்.
🎈உதிரம் கொடுப்போம், உயிர் கொடுப்போம்.🎈
இரத்ததானம் பற்றிய சிறு விளக்கம்,
"இரத்தம தானம் செய்ய தேவையான தகுதிகள் ",
🔺18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் பெண்கள் அனைவரும் இரத்தம் தானம் செய்யலாம் .
🔺நமது எடை 50கிலோவிற்கு குறையாது இருத்தல் வேண்டும்.
🔺 உடலின் ஹீமோகுளோபின் அளவு 12.5. கிராம் இருத்தல் வேண்டும் .
🔺 இரத்த அழுத்தம் இயல்பு நிலையில் இருக்கவேண்டும் .(100-140 மேல் அளவு ,60-90 கீழ் அளவு )
🔺 மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்தம் தானம் செய்யலாம் .
"இரத்த தானத்தை தவிர்க்க வேண்டியவர்கள் "
🔺24 மணி நேரத்திற்கு முன் மது அருந்தி இருத்தல் கூடாது .
🔺பெரிய அறுவை சிகிச்சை செய்த 6 மாதத்திற்குள்ளோ,
சிறிய அறுவை சிகிச்சை செய்த 3மாதத்திற்குள்ளோ இரத்த தானம் செய்யக்கூடாது .
🔺 மலேரியா ,டைஃபாய்டு சிகிச்சை எடுத்த 3 மாதத்தில் இரத்த தானம் செய்யக்கூடாது
🔺மஞ்சள்காமாலை சிகிச்சை எடுத்த 6 மாதத்திற்கு இரத்த தானம் செய்யக்கூடாது .
🔺ஆறு மாதத்திற்குள் பச்சை குத்துதல் ,பல் பிடுங்கி இருத்தல் கூடாது.
🔺பெண்கள் கருவுற்று இருக்கும் காலத்திலும் ,குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும், மாதவிடாய் காலங்களிலும் இரத்த தானம் செய்தல் கூடாது.
பொது குறிப்புகள்
🔺நம் ஒவ்வொருவர் உடலிலும் தோராயமாக 5 லிட்டர் இரத்தம் இருக்கும்.
🔺இரத்தம் தானம் செய்யும்போது உடலில் இருந்து எடுப்பது 350 மில்லி லிட்டர் மட்டுமே.
🔺நாம் தானம் செய்த 350 மி.லி இரத்தம் அடுத்த 24 மணி நேரத்தில் புதிதாக நமது உடலில் மீண்டும் உற்பத்தி ஆகிவிடும் .
🔺இரத்தம் தானம் செய்ய 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
🔺இரத்தம் தானம் செய்த உடன் வழக்கம்போல் அன்றாட வேலைகள் செய்யலாம்.
இவற்றை நாம் மனதில் வைத்து உதவி செய்வோம்.
🎈உதிரம் கொடுப்போம், உயிர் கொடுப்போம்.🎈
Subscribe to:
Comments (Atom)



















